வெட்டு மச்சான்.. வீச்சரிவாளால் கேக் வெட்டிய மணிகண்டன்.. மொத்த கும்பலையும் அள்ளியது கரூர் போலீஸ்
அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய கரூர் ரவுடிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்
Recommended Video
கரூர்: வெட்டுடா மச்சான்.. என்று நண்பர்கள் சொல்ல... அரிவாளால் கேக் வெட்டி ஹேப்பி பேர்த்டே கொண்டாடினாரே மணிகண்டன்.. அவரைதான் எதிர்பார்த்தபடியே போலீஸ் குண்டுகட்டாக அள்ளி கொண்டு போய்விட்டது
ஒரு காலத்தில் ரொம்பவும் பயங்கரமான ஆயுதங்கள் என்று நாம் நினைத்து பயந்த அரிவாள், பட்டாக்கத்தி எல்லாம் இன்றைய இளம் ரவுடிகளிடம் அசால்டாக புழங்கி வருகிறது. இவர்கள் எல்லாம் தாங்கள் ரவுடிகள் என்பதையே ஒரு போஸ்டிங்காக வைத்து கொண்டிருக்கிறார்கள்.
இதில் வருஷந்தோறும் பிறந்த நாளையும் சக ரவுடிகளுடனே கொண்டாடவும் ஆரம்பித்து விட்டார்கள். அதுவும் நடுரோட்டில் கொண்டாடினால்தான் இவர்களுக்கு சிறப்பு. கையில் அரிவாளை கொண்டு கேக்கை வெட்டினால் இன்னும் சென்ட்டிமென்ட்!

ரவுடி பினு
இந்த கலாச்சாரம் சென்னையில்தான் ஆரம்பமானது. ரவுடி பினுதான் இந்த பழக்கத்தை ஆரம்பித்து வைத்தார். அவரை தூக்கி ஜெயிலில் போட்டு, களி திண்ண வைத்தும், மற்ற ரவுடிகள் இன்னும் திருந்தாமல்தான் உள்ளனர்.

நடுராத்திரி, நடுரோட்டில்..
இப்படித்தான், நேற்று முன்தினம், கரூர் அருகே சணப்பிரட்டி செல்லும் ரோட்டில் தொழிற்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே ஒரு ரவுடியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ரவுடியின் பெயர் மணிகண்டன். நடுராத்திரி, நள்ளிரவு, நடுரோட்டில் டேபிள் போடப்பட்டு, மெழுகுவர்த்தியும் ஏற்றப்பட்டது.

வெட்டு மச்சான்
மணிகண்டன் மெழுகுவர்த்திகளை ஊத... "வெட்டு மச்சான்.. கேக் வெட்டுடா" என்று சக ரவுடிகள் கைகளை தட்டி சொல்கிறார்கள். மணிகண்டனும் நீளமான அரிவாளால் கேக்கை வெட்டினார். இதை உடன் இருந்த இன்னொரு ரவுடி வீடியோ எடுத்தார்.

3 பேர் கைது
ரவுடிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடும் தகவல் போலீசின் காதுகளுக்கு எட்டியது. கொண்டாட்டம் முடிவதற்குள் சம்பவ இடத்துக்கு சென்றுவிட்டனர் போலீசார். ஆனால் இவர்களை பார்த்ததும், ரவுடிகள் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர். ஆனாலும் போலீசார் விரட்டி பிடித்து 3 பேரை ரவுண்டு கட்டி கைது செய்தனர். மற்றவர்கள் தப்பி விட்டனர்.

வலைவீச்சு
கைதான 3 பேரில் ஹேப்பி பேர்த்டே பேபி மணிகண்டனும் ஒருவர். மணிகண்டனுக்கு 24-வது பிறந்த நாள் இது. மற்ற இருவரது பெயர் அசோக் ஆனந்த் 31, கார்த்திக் 28, என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பி ஓடிய மற்ற ரவுடிகளையும் தேடி வருகிறார்கள்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications