8 மணி நேரம்.. கரூரை கலங்கடித்த கருப்பு கார்.. சூட்கேஸை திறந்து பார்த்த போலீசுக்கு பெரிய ட்விஸ்ட்
கரூர் : கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தேசிய நெடுசாலையில் ஒரே இடத்தில் பல மணி நேரமாக நின்ற காரில் சீரியஸாக சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு காத்திருந்த ட்விஸ்டை பாருங்கள்.
பொதுவாக போலீசார் தினமும் வாகன சோதனை நடத்துவார்கள். அப்படி வாகன சோதனை நடத்தும் போது சில நேரங்களில் பழைய குற்றவாளிகள் சிக்குவார்கள். சில இடங்களில் வில்லங்கமான நிகழ்வுகள் நடப்பது உண்டு.

இதனிடையே ஆள் இல்லாமல் நீண்ட நேரம் நிறுத்தப்படும் கார்கள், பைக்குகள், அனாதையாக கிடக்கும் பைக்குகள் போன்றவை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்யப்படுவது வழக்கம். அப்படித்தான் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் சோதனை நடந்துள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரமாக கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமான வகையில் கார் ஒன்று நிற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவல் அறிந்து போலீஸ் படை அங்கு விரைந்து சென்றது. சுமார் எட்டு மணி நேரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்த காரை, சந்தேகத்துடன் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த போலீசார், ஒரு கட்டத்தில் நொந்து போனார்கள்.
ஏனெனில் சீரியஸாக சோதனை நடத்திய போலீசார், ஒரு கட்டத்தில் காரில் பதிவு எண்ணை வைத்து உரிமையாளரின் தொலைப்பேசி எண்ணுக்கு அழைத்து ஏன் காரை நிறுத்திவிட்டு சென்றீர்கள் என்று கேட்டுள்ளார்கள்- அதற்கு அவர் கார் பழுதானதால் அங்கு நிறுத்திவிட்டு லிஃப்ட் கேட்டு வீட்டிற்கு சென்றதாக கூறியுள்ளார். மேலும் தனது காரில் துணிகள் மட்டுமே உள்ளது என்றும் கூறியுள்ளார். இதனால் சீரியஸாக நடந்த சோதனை கடைசியில் காமெடியில் முடிந்தது.












Click it and Unblock the Notifications