ஓரினசேர்க்கைக்கு அழைத்து.. 2 பேரை நிர்வாணமாக்கி படம் பிடித்து, அடித்து சித்ரவதை.. ஓசூரில் ஷாக்
கிருஷ்ணகிரி: ஒசூரில் ஆன்லைன் மூலம் ஓரினசேர்க்கைக்கு அழைத்து அடித்து உதைத்ததுடன், 2 பேரை நிர்வாணமாக்கி படம் பிடித்து, பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
ஓரினசேர்க்கைக்கு பல நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஓரினசேர்க்கை கலாச்சாரத்திற்கு எதிரான குற்றமாக பார்க்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் பல ஆப்(App) களும் தொடங்கப்பட்டுள்ளன..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதிகளில் ஆப் மூலம் அருகாமையில் உள்ள ஓரினசேர்கையாளர்களை கண்டறிந்து விருப்பமுள்ளவர்களுடன் Chat செய்து நேரில் சந்தித்து இச்சையை தீர்த்து வருகின்றனர் .
இந்த நிலையில் ஒசூரை சேர்ந்த இரண்டு பேர் தனிதனியாக ஆப்பில் பழகிய நபருடன் உடல்உறவு கொள்ள அவர்கள் தெரிவிக்கப்பட்ட பகுதியை நோக்கி சென்றபோது ஓரினசேர்க்கையாளர்களை குறிவைத்த நான்கு பேர் கொண்ட குழு இருவரையும் கடுமையாக தாக்கி நிர்வானமாக படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றிவிடுவதாகவும் வீட்டில் தெரிவித்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.
அவர்களிடமிருந்த பணத்தை பறித்துக்கொண்டு எச்சரித்து அனுப்பி தலைமறைவாகி உள்ளனர். பாதிக்கப்பட்டோர் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலிசார் கர்நாடக மாநிலம் சர்ஜாபுரத்தை சேர்ந்த நாகராஜ்(33), சுனில்(28) மற்றும் ஒசூரை சேர்ந்த ஸ்ரீகாந்த்(24) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications