கிருஷ்ணகிரி அருகே சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டன.. 4 பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் பயணிகள் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே சரக்கு ரயில் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அது திடீரென தடம் புரண்டது. இதில் 6 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கிவிட்டன. இதை சீரமைக்கும் பணிகளை ரயில்வே ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் 4 பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. சேலம்- யஷ்வந்த்பூர் விரைவு ரயில், தருமபுரி- பெங்களூர் ரயில், பெங்களூர்- ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை- பெங்களூர் ரயில் ஆகிய 4 வழித்தடங்களில் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
தருமபுரி- ஓசூருக்கு பதிலாக ஜோலார்பேட்டை- திருப்பத்தூர் வழியாக மற்ற ரயில்கள் திருப்பிவிடப்பட்டன. இதனால் பரபரப்பு எழுந்துள்ளது. சரக்கு ரயில் தடம் புரண்டதற்கு என்ன காரணம் என்பதை விசாரித்து வருகிறார்கள். ஒரு வேளை யாரேனும் வேண்டுமென்றே ரயில் தடம் புரள செய்தனரா, இது பயணிகள் ரயிலுக்கு வைக்கப்பட்ட குறியா என்ற கோணத்திலும் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications