ஓசூரில் இந்து மகாசபா மாநில செயலாளர் படுகொலை.. ஆறு பேர் கும்பல் வெறிச்செயல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், இந்து மகாசபா மாநிலச் செயலாளர், ஆறு பேர் கொண்ட கும்பலால், அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அனுமந்த நகர் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ்(45). இவர், இந்து மகாசபா என்ற அமைப்பின் மாநிலச் செயலாளராக இருந்து வந்தார்.

நாகராஜ் தனது வீட்டின் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த ஆறு பேர் கொண்ட கும்பல், நாகராஜை வழிமறித்து, விரட்டி விரட்டி சரமாரியாக வெட்டினர். தலையிலும் அடிவயிற்றிலும் பலத்த காயம் ஏற்பட்ட நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த ஓசூர் காவல் துணைக் கண்காணிப்பாளா் முரளி, மேலும் ஓசூர் காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இந்த கொலைக்கு பின்னால் எந்த மத அல்லது அரசியல் நோக்கமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது நாகராஜ் செய்துவந்த ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ள போட்டி காரணமாக நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்" என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
சில மாதங்களுக்கு முன்பு, நாகராஜ் தனது உயிருக்கு அச்சுறுத்தலை உணர்ந்ததால் பாதுகாப்பு கோரி போலீஸ் அதிகாரிகளிடம் மனு அளித்தபோது, போலீசார் அவருக்கு பாதுகாப்பு மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
கொலையாளிகளை கைது செய்ய ஆறு சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி பாண்டி கங்காதர் தெரிவித்தார். "கொலைக்கு காரணம் இன்னும் அறியப்படவில்லை. இறந்த நாகராஜ்க்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளார்கள்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications