Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டுல சுசிலா.. நடுரோட்டிலேயே படுத்துட்டாரு.. பரபரத்த போச்சம்பள்ளி.. அடக்கடவுளே

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. கிருஷ்ணகிரியையே பரபரப்புக்கு உள்ளாக்கிவிட்டார் சுசிலா. யார் இவர்?

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய போச்சம்பள்ளியில் நகைக்கடை நடத்தி வருபவர் கங்காதரன். இவரது நகைக்கடையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருட்டு முயற்சி நடந்தது.

Krishnagiri Bus Stand and Who is this Suseela and why did she take this sudden decision on Pochampalli High Ways

நகைக்கடைகள்: இந்த நகைக்கடையின் சுவரில் துளையிட்டு, மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். இதையடுத்து, போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இறுதியில், போச்சம்பள்ளி சந்தையில் சந்தேகம் அடையும் வகையில் சுற்றித்திரிந்த 3 நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர்கள் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெகன் (27) அவரது தம்பி வினோத் (24), தர்மபுரியை சேர்ந்த கண்ணன் (34) ஆகியோர் என்பதும். நகைக்கடையின் சுவரில் துளை போட்டு நகைகளை கொள்ளையடிக்க முயன்றது இவர்கள்தான் என்பதும் உறுதியானது... இதையடுத்து 3 பேரையுமே போலீசார் கைது செய்துவிட்டனர். இந்த 3 பேருமே இப்போது சிறையில் உள்ளார்கள்.

கெட்ட வார்த்தை: இந்நிலையில், போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் திடீரென ஒரு பெண் வந்து நடுரோட்டில் நின்றார்.. ஆவேசமாக ரோட்டில் வந்து நின்றவர், கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்துவிட்டார்... இதனால், பஸ்கள், உட்பட எந்த வாகனமும் செல்ல முடியவில்லை.. பிறகு, திடீரென ரோட்டிலேயே படுத்துக்கொண்டார்.. நீண்ட நேரம் நடுரோட்டில் படுத்து கொண்டதால், வாகன ஓட்டிகளால், அவரை மீறி செல்ல முடியவில்லை.

எனினும் ஒரு சில வாகனங்கள், அந்த பெண்ணை தாண்டி செல்ல முயன்றது. ஆனாலும் அந்த பெண் விடவில்லை.. அவர்களை மிரட்டி வாகனத்தை தடுத்து நிறுத்தினார்.. இதனால் வாகனங்கள் எதுவுமே செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றுவிட்டன. அதற்குள் போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் பறந்தது. விரைந்து வந்த அவர்கள் அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயன்றார்கள்.. என்ன நடந்தது? என்றும் கேட்டார்கள்.

மகன்கள்: தன்னுடைய பெயர் சுசிலா என்றார்.. கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருட்டு கேஸில் கைதாகி சிறையிலிருக்கும் ஜெகநாதன், விக்னேஷ் இருவருமே இவரது மகன்களாம்..கண்ணன் என்பவர் மருமகனாம்.

மகன்கள், மருமகன் மீது பொய் வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பியது போலீஸ்காரர்கள்தான் என்று சத்தம் போட துவங்கினார்.. சுசிலா அப்போது மதுபோதையில் இருப்பதும் தெரியவந்தது.

பரபரப்பு: இதையடுத்து, போலீசார் போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்று சொல்லி, சுசீலாவை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.. கிருஷ்ணகிரி ரோட்டில் சுசிலா செய்த அட்டகாசம்தான், வீடியோவாக இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+