Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் ஆம்னி பஸ்சில்.. ஆடிப்போன கோவை பெண் ஐடி ஊழியர்.. யாரந்த தாம்பரம் இளைஞர்?

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கோவையை சேர்ந்த 23 வயது இளம்பெண், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஐடி என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஆம்னி பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அந்த பஸ், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உத்தனப்பள்ளி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பஸ்சில் பயணம் செய்த சென்னை தாம்பரத்தை சேர்ந்த பயணி ஒருவர் செய்த காரியம் பயணிகளை ஆடிப்போக வைத்துள்ளது.

பெங்களுர் மற்றும் சென்னைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான ஆம்னி பேருந்துகள் சென்று வருகின்றன. அதேபோல் மறுமார்க்கமாக பெங்களூரில் இருந்தும், சென்னையில் இருந்தும் ஏராளமான பேருந்துகள் பெங்களூருக்கு சென்று வருகின்றன.

Omni bus A man from Tambaram was arrested based on a complaint filed by a woman engineer from Coimbatore

பெங்களூர் மற்றும் பொறுத்தவரை ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஐடி துறையில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு வார இறுதியிலும் சொந்த ஊர் வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இதனால் வாரஇறுதிகளில் ஆம்னி பேருந்துகளில் அதிகப்படியானோர் சென்று வருகிறார்கள். பல பெண்கள் சொந்த ஊர் செல்ல ஆம்னி பேருந்துகளையே நாடுகிறார்கள். அப்படி வருவது அவர்களுக்கு பாதுகாப்பான பயணமாகவே பொதுவாக இருக்கும்.அதேநேரம் சில ஆண்களின் தவறான செயல், பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது.

கோவையை சேர்ந்த 23 வயது இளம்பெண், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஆம்னி பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

அந்த பஸ், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உத்தனப்பள்ளி மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பஸ்சில் பயணம் செய்த காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தை சேர்ந்த முகமது கவுஸ் (40) என்பவர் அந்த இளம்பெண்ணிடம் அத்துமீறினாராம். இதை தட்டி கேட்ட இளம்பெண்ணிடம் அவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, அந்த கோவை இளம்பெண் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி முகமது கவுசை கைது செய்தனர். கைதான முகமது கவுஸ் பெங்களூருவில் உள்ள உணவு வினியோக நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இது தொடர்பாக, சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+