பெங்களூர் ஆம்னி பஸ்சில்.. ஆடிப்போன கோவை பெண் ஐடி ஊழியர்.. யாரந்த தாம்பரம் இளைஞர்?
கிருஷ்ணகிரி: கோவையை சேர்ந்த 23 வயது இளம்பெண், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஐடி என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஆம்னி பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அந்த பஸ், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உத்தனப்பள்ளி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பஸ்சில் பயணம் செய்த சென்னை தாம்பரத்தை சேர்ந்த பயணி ஒருவர் செய்த காரியம் பயணிகளை ஆடிப்போக வைத்துள்ளது.
பெங்களுர் மற்றும் சென்னைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான ஆம்னி பேருந்துகள் சென்று வருகின்றன. அதேபோல் மறுமார்க்கமாக பெங்களூரில் இருந்தும், சென்னையில் இருந்தும் ஏராளமான பேருந்துகள் பெங்களூருக்கு சென்று வருகின்றன.

பெங்களூர் மற்றும் பொறுத்தவரை ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஐடி துறையில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு வார இறுதியிலும் சொந்த ஊர் வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இதனால் வாரஇறுதிகளில் ஆம்னி பேருந்துகளில் அதிகப்படியானோர் சென்று வருகிறார்கள். பல பெண்கள் சொந்த ஊர் செல்ல ஆம்னி பேருந்துகளையே நாடுகிறார்கள். அப்படி வருவது அவர்களுக்கு பாதுகாப்பான பயணமாகவே பொதுவாக இருக்கும்.அதேநேரம் சில ஆண்களின் தவறான செயல், பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது.
கோவையை சேர்ந்த 23 வயது இளம்பெண், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஆம்னி பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
அந்த பஸ், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உத்தனப்பள்ளி மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பஸ்சில் பயணம் செய்த காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தை சேர்ந்த முகமது கவுஸ் (40) என்பவர் அந்த இளம்பெண்ணிடம் அத்துமீறினாராம். இதை தட்டி கேட்ட இளம்பெண்ணிடம் அவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, அந்த கோவை இளம்பெண் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி முகமது கவுசை கைது செய்தனர். கைதான முகமது கவுஸ் பெங்களூருவில் உள்ள உணவு வினியோக நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இது தொடர்பாக, சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications