ஓசூர் டாடா நிறுவன பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா விவகாரம்: தப்பிச் சென்றவர் டெல்லியில் கைது

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: ஓசூர் டாடா நிறுவன பெண்கள் தங்கும் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரகசிய கேமரா வைத்த நீலு குமாரியின் ஆண் நண்பரான ரவி பிரதாப் சிங்கை டெல்லியில் கைது செய்த தனிப்படை போலீசார், அவரை ஒசூர் அழைத்து வந்து விசாரிக்க உள்ளனர்.

கெலமங்​கலம் அருகே தனி​யார் தொழிற்​சாலை பெண்​கள் விடுதி குளியல் அறை​யில் ரகசிய கேமரா பொருத்​திய விவ​காரத்​தில் கைதான வடமாநிலப் பெண், தவறான தகவலைக் கொடுத்து தனது ஆண் நண்​பரை தப்ப வைத்​தது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இதையடுத்​து, தலைமறை​வானவரை தேடி போலீ​சார் ஜார்க்​கண்ட் மாநிலத்​துக்கு விரைந்​துள் ளனர்.

hosur tata krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்​டம் கெலமங்​கலம் அருகே நாகமங்​கலத்​தில் உள்ள டாடா தொழிற்​சாலையில் பணிபுரி​யும் பெண் தொழிலா​ளர்​கள் தங்​கு​வதற்​காக லாளிக்​கல் பகு​தி​யில் விடுதி உள்​ளது. இங்கு 6 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் தங்​கி​யிருந்​தனர். இந்​நிலை​யில் கடந்த 1 ஆம் தேதி விடு​தி​யில் உள்ள ஒரு அறை​யின் குளியல் அறை​யில் ஒடி​சாவைச் சேர்ந்த நீலுகு​மாரி குப்​தா (22) என்ற பெண் தொழிலாளி ரகசிய கேமரா பொருத்​தி​யது தெரிய வந்​தது.

இதுதொடர்​பாக விடுதி காப்​பாளரிடம் சக பெண் தொழிலா​ளிகள் கூறிய தகவலின் அடிப்​படை​யில் கேமரா அகற்​றப்​பட்டு, தொழிற்​சாலை அதி​காரி​கள் விசா​ரணை நடத்தினர். பின்னர் போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட்டு நீலுகு​மாரி குப்​தாவை போலீசார் கைது செய்​தனர். அவர் கொடுத்த தகவல் அடிப்​படை​யில் பெங்​களூரைச் சேர்ந்த அவரது ஆண் நண்​பர் சந்​தோஷ் என்​பவரை​யும் கைது செய்​தனர்.

இதனிடையே, சந்​தோஷிடம் நடத்​திய விசா​ரணை​யில், அவருக்கு இந்த விவகாரத்​தில் தொடர்பு இல்லை என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்​து, நீலுகு​மாரி குப்​தா​விடம் மீண்​டும் நடத்​திய விசா​ரணை​யில், ரகசிய கேம​ராவை பொருத்​தச் சொன்​னது பெங்​களூரில் ஓட்​டுந​ராக பணிபுரி​யும் இன்​னொரு ஆண் நண்​ப​ரான ஒடி​சாவைச் சேர்ந்த ரவி பிர​தாப்​சிங் என்​பதும், அவரை தப்ப வைக்க போலீசாரிடம் தவறான தகவலை நீலுகு​மாரி குப்தா தெரி​வித்​ததும், ரவி பிரதாப்​சிங் ஜார்​கண்ட் மாநிலத்​துக்கு தப்​பிச் சென்​றதும் தெரியவந்​தது.

இதையடுத்​து, உத்​தனப்​பள்ளி போலீ​சார் 5 பேர் நேற்று காலை பெங்களூரில் இருந்து விமானம் மூலம் விரைந்​தனர். ரகசிய கேமரா வைத்த நீலு குமாரியின் ஆண் நண்பரை தனிப்படை போலீசார் டெல்லியில் கைது செய்தனர். டெல்லியில் கைதான ரவி பிரதாப் சிங்கை ஒசூர் அழைத்து வந்து விசாரிக்க உள்ளனர்.

இதற்கிடையே, நேற்று நண்​பகலில் விடுதி வளாகத்​தில் திரண்ட பெண் தொழிலாளிகள், இந்த விவ​காரத்​தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்​ப​தாக​வும், அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக்கோரியும் தர்​ணா​வில் ஈடு​பட்​டனர். அவர்களை பாது​காப்பு பணி​யில் இருந்த போலீ​சா மற்​றும் தனி​யார் தொழிற்சாலை உயர் அதி​காரி​கள் அமை​திப்​படுத்தி அனுப்பி வைத்​தனர். இந்தப் பிரச்​சினை​யால் விடு​தி​யில் தங்​கி​யுள்ள பெண்​கள் பலர், தங்​கள் சொந்த ஊருக்கு திரும்பி வரு​கின்​றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+