படிக்கின்ற நேரத்தில் மாணவர்களுக்கு போராட்டம் எதற்கு? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அட்வைஸ்
கிருஷ்ணகிரி: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் ஒரு சிலரின் தூண்டுதலுக்கு இணங்க நடைபெறுவதாகவும், படிக்கும் நேரத்தில் மாணவர்களுக்கு ஏன் போராட்டம் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஒசூர் மாநகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் முதல்முறையாக மாமன்ற உறுப்பினர்களாக தேர்வானவர்களுக்கான பாராட்டு விழா, தமிழியக்கம் சார்பில் நடத்தப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
விழாவில் பேசிய மா.சுப்பிரமணியன், "உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாலைகள் மட்டும் விழாது. மோசமான விமர்சனங்களும் வரும். எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ள வேண்டும் இரண்டையும் சகித்துக்கொள்வதுதான் உள்ளாட்சி அமைப்புகளுடைய வேலை. அதில் வெற்றி பெற்றால் ஆட்சிக்கு நற்பெயர் கிடைக்கும்." என்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக மருத்துவ மாணவர்களின் தொடரும் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இதுக்குறித்து சட்டமன்றத்திலேயே பதில் தரப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம் ரூ.119 கோடி வரை குறைக்கப்பட்டுள்ளது..
இதுவரை வழங்கப்படாமல் இருந்த உதவித் தொகை ரூ.17 கோடியையும் வழங்கி இருக்கிறோம். மாணவர்களுக்கு அதிகபட்சமாகவே செய்திருக்கிறோம். ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மற்றவர்களின் தூண்டுதலுக்கு மாணவர்கள் அடிப்பணிய வேண்டாம். படிக்கின்ற நேரத்தில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறேன்." என்றார்.
ஒசூர் மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக்கப்பட்ட பின்பு நோயாளிகள் கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவது ஏன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது, இந்த மாதம் முதல்வர் காணொலி காட்சி வாயிலாக புதிய கட்டிடத்தை தொடக்கி வைத்த பின்பு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்." என விளக்கினார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications