படிக்கின்ற நேரத்தில் மாணவர்களுக்கு போராட்டம் எதற்கு? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அட்வைஸ்
கிருஷ்ணகிரி: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் ஒரு சிலரின் தூண்டுதலுக்கு இணங்க நடைபெறுவதாகவும், படிக்கும் நேரத்தில் மாணவர்களுக்கு ஏன் போராட்டம் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஒசூர் மாநகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் முதல்முறையாக மாமன்ற உறுப்பினர்களாக தேர்வானவர்களுக்கான பாராட்டு விழா, தமிழியக்கம் சார்பில் நடத்தப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
விழாவில் பேசிய மா.சுப்பிரமணியன், "உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாலைகள் மட்டும் விழாது. மோசமான விமர்சனங்களும் வரும். எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ள வேண்டும் இரண்டையும் சகித்துக்கொள்வதுதான் உள்ளாட்சி அமைப்புகளுடைய வேலை. அதில் வெற்றி பெற்றால் ஆட்சிக்கு நற்பெயர் கிடைக்கும்." என்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக மருத்துவ மாணவர்களின் தொடரும் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இதுக்குறித்து சட்டமன்றத்திலேயே பதில் தரப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம் ரூ.119 கோடி வரை குறைக்கப்பட்டுள்ளது..
இதுவரை வழங்கப்படாமல் இருந்த உதவித் தொகை ரூ.17 கோடியையும் வழங்கி இருக்கிறோம். மாணவர்களுக்கு அதிகபட்சமாகவே செய்திருக்கிறோம். ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மற்றவர்களின் தூண்டுதலுக்கு மாணவர்கள் அடிப்பணிய வேண்டாம். படிக்கின்ற நேரத்தில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறேன்." என்றார்.
ஒசூர் மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக்கப்பட்ட பின்பு நோயாளிகள் கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவது ஏன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது, இந்த மாதம் முதல்வர் காணொலி காட்சி வாயிலாக புதிய கட்டிடத்தை தொடக்கி வைத்த பின்பு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்." என விளக்கினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications