இந்தியாவில் தாக்குதல்: தீவிரவாத சதியில் ஜாகிர்நாயக்குக்கு தொடர்பா? மலேசியா நாடாளுமன்றத்தில் கேள்வி
கோலாலம்பூர்: இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதில் மத பிரசாரகர் ஜாகிர் நாயக்குக்கு தொடர்பு உள்ளதா? என மலேசியா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி. ராம்கர்பால் சிங் கேள்வி எழுப்பினார்.
இந்தியாவை சேர்ந்த மத பிரசாரகர் ஜாகிர் நாயக். இந்தியாவில் இருந்து வெளியேறி மலேசியாவில் அடைக்கலாமாகி இருக்கிறார். அவரை மலேசியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என பல்வேறு இந்தியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் மலேசியாவை சேர்ந்த ரோஹிங்யா தீவிரவாத இயக்கம் ஒன்று இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. இந்த தாக்குதலுக்கு ஹவாலா மூலம் பண பரிமாற்றம் நடந்ததாகவும் சென்னை தரகர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இத்தகவலை மலேசியா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி. ராம்கர்பால் சிங் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் இந்த சதித் திட்டத்தில் ஜாகிர் நாயக்குக்கு தொடர்பிருக்கிறதா? அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றும் ராம்கர்பால் சிங் கேள்வி எழுப்பினார்.
ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா? இந்திய பத்திரிகை குறிப்பிட்டுள்ள ரோஹிங்யா தீவிரவாத இயக்கம் எது என அரசு கண்டறிந்துவிட்டதா? எனவும் ராம்கர்பால் சிங் கேட்டிருந்தார்.
இதற்கு மலேசியாவின் உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் பதிலளிக்கையில், தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியா எந்த ஒத்துழைப்பையும் கேட்கவில்லை. இந்தியா கோரினால் அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
16 வயசு பிள்ளைங்களுக்கு ஷாக்.. இனி இன்ஸ்டா யூஸ் பண்ண முடியாது! அதிரடியாக உத்தரவிட்ட அரசு! என்னாச்சு? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications