இந்தியாவில் தாக்குதல்: தீவிரவாத சதியில் ஜாகிர்நாயக்குக்கு தொடர்பா? மலேசியா நாடாளுமன்றத்தில் கேள்வி
கோலாலம்பூர்: இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதில் மத பிரசாரகர் ஜாகிர் நாயக்குக்கு தொடர்பு உள்ளதா? என மலேசியா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி. ராம்கர்பால் சிங் கேள்வி எழுப்பினார்.
இந்தியாவை சேர்ந்த மத பிரசாரகர் ஜாகிர் நாயக். இந்தியாவில் இருந்து வெளியேறி மலேசியாவில் அடைக்கலாமாகி இருக்கிறார். அவரை மலேசியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என பல்வேறு இந்தியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் மலேசியாவை சேர்ந்த ரோஹிங்யா தீவிரவாத இயக்கம் ஒன்று இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. இந்த தாக்குதலுக்கு ஹவாலா மூலம் பண பரிமாற்றம் நடந்ததாகவும் சென்னை தரகர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இத்தகவலை மலேசியா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி. ராம்கர்பால் சிங் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் இந்த சதித் திட்டத்தில் ஜாகிர் நாயக்குக்கு தொடர்பிருக்கிறதா? அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றும் ராம்கர்பால் சிங் கேள்வி எழுப்பினார்.
ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா? இந்திய பத்திரிகை குறிப்பிட்டுள்ள ரோஹிங்யா தீவிரவாத இயக்கம் எது என அரசு கண்டறிந்துவிட்டதா? எனவும் ராம்கர்பால் சிங் கேட்டிருந்தார்.
இதற்கு மலேசியாவின் உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் பதிலளிக்கையில், தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியா எந்த ஒத்துழைப்பையும் கேட்கவில்லை. இந்தியா கோரினால் அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றார்.
-
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications