ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா வேக்சின்.. மனித சோதனை முடிவு வெளியீடு.. 70% தடுப்பாற்றல் கொண்டது
லண்டன்: ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா வேக்சின் 70% தடுப்பாற்றல் கொண்டது என்று இடைக்கால மனித சோதனை முடிவுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை 90% வரை உயர்த்த முடியும் என்று சோதனை குழு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது.
கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகளில் ஆஸ்டெராசெனெகா மருந்து அதிக நம்பிக்கை அளித்துள்ளது. ஆஸ்டெராசெனெகா - ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் AZD1222 தடுப்பு மருந்து மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது.

தடுப்பாற்றல்
இறுதிக்கட்ட மனித சோதனையில் இந்த மருந்து உள்ளது.இந்த மருந்தின் 3ம் கட்ட மனித சோதனையின் இடைக்கால முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் கொரோனா வேக்சின் 70% வெற்றி பெற்றுள்ளது. அதாவது இந்த மருந்து 70% தடுப்பாற்றல் கொண்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிகம் ஆகும்
ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் தடுப்பு மருந்து இதை விட அதிக தடுப்பாற்றல் கொண்டது. ஃபைசர் நிறுவனம் 95% தடுப்பாற்றல் கொண்டது. மாடர்னா நிறுவனம் 94.5% தடுப்பாற்றல் கொண்டது. ஆனால் ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் கொரோனா வேக்சின் 70% தடுப்பாற்றல்தான் கொண்டது. இருந்தாலும் குறைந்த விலை மற்றும் வெப்பநிலை காரணமாக ஆக்ஸ்போர்ட் மருந்து அதிகம் பரிந்துரைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பாற்றல்
இந்த மருந்தில் சிறிய மாற்றங்களை செய்து, முழுமைப்படுத்தும்பட்சத்தில் இதன் தடுப்பாற்றல் 90% தொட வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்து மொத்தம் 20 ஆயிரம் பேரிடம் யுகே மற்றும் பிரேசிலில் சோதனை செய்யப்பட்டது. இதில் இரண்டு டோஸ் வேக்சின் எடுத்த 30 பேருக்கு கொரோனா வந்துள்ளது.

எத்தனை பேர்
பொய்யான மருந்து (சத்து மருந்து) எடுத்தவர்களுக்கு 101 பேருக்கு கொரோனா வந்துள்ளது. இதன் மூலம் இதன் தடுப்பாற்றல் சதவிகிதம் 70% கொண்டது என்று இடைக்கால முடிவுகள் தெரிவிக்கிறது. இந்த மருந்தில் அதிக டோஸ் எடுக்கும் போது 62% தடுப்பாற்றல் உள்ளது. ஆனால் அதிக டோஸ் எடுத்துவிட்டு பின் குறைவான டோஸ் ஒன்று எடுத்தால் 90% தடுப்பாற்றல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயரலாம்
இது இடைக்கால சோதனை முடிவுகள் ஆகும். இதனால் வரும் நாட்களில் இந்த மருந்தின் தடுப்பாற்றல் சதவிகிதம் இதை விட அதிகமாக உயர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இதில் பெரிய அளவில் பின்விளைவுகள் எதுவுமில்லை.இந்தியாவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உடன் இணைந்து ஆஸ்டெராசெனெகா இந்த மருந்து உற்பத்தியை செய்கிறது.

எப்படி
ஆக்ஸ்போர்ட் - முதல் மற்றும் இரண்டாம் சோதனை - 2500+ பேரிடம் சோதனை செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக தற்போது 25000 பேரிடம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இறுதி சோதனை முடிவு இந்த வருட இறுதிக்குள் வெளியாகும்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications