மாணவர்களுக்கு ஒழுக்கம் மிக முக்கியம்... அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவில் தலாய்லாமா பேச்சு..!
லண்டன்: மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும், ஒழுக்கமும் மிக முக்கியமானது என தலாய்லாமா தெரிவித்துள்ளார்.
மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 89-வது பிறந்தநாளை ஒட்டி World Humanitarian Drive அமைப்பு சார்பில் காணொலி மூலம் சிறப்புக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்த அமைப்பின் தலைவர் அப்துல் பாசித் சையத் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அப்துல் கலாமின் குடும்ப உறவினர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அதில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் ஆற்றிய தலாய்லாமா அறிவுரைகளையும் நல்கினார். இளம் வயது முதலே தன்னம்பிக்கையையும், சுய ஒழுக்கத்தையும் பேணி நடக்க வேண்டும் என்றும் தனி மனித அமைதி தான் நிம்மதியான உலகை படைக்கும் எனவும் கூறினார். மேலும், ஒருமைப்பாட்டு உணர்வை மாணவர்களுக்கு ஆசிரியர் பெருமக்களும், பெற்றோரும் போதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அப்துல் கலாமின் சேவைகளை பட்டியலிட்டு புகழாரம் சூட்டிய தலாய்லாமா மாணவர்கள் அவரை முன் மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரினார். சமய நல்லிணக்கத்தை கடைபிடித்து அமைதியான உலகை உருவாக்க ஒவ்வொருவரும் உறுதியேற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து அப்துல் கலாமின் அண்ணன் பேரன் சலீம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கடல் கடந்தும் அப்துல் கலாமின் புகழை கொண்டு சேர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications