ராணி எலிசபெத்தை விட அதிக சொத்து.. இங்கிலாந்தை திரும்பி பார்க்க வைத்த இந்திய பெண்.. யார் இவர்?
லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத்தை விட அங்கு வசிக்கும் இந்திய பெண் ஒருவர் அதிக சொத்து மதிப்பு கொண்டவராக இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. யார் அந்த இந்திய பெண்.. அவர் எப்படி பல கோடிகளுக்கு அதிபதி ஆனார் என்று பார்க்கலாம்.
இங்கிலாந்து நாட்டின் வருங்கால பிரதமராகும் வாய்ப்பு கொண்டவராக பார்க்கப்படுபவர் ரிஷி சுனக். அந்நாட்டு நிதித்துறை அமைச்சரான இவருக்கு அங்கு பிரதமராகும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.
ஆனால் சமீபத்தில் அவரின் மனைவி அக்சதா மூர்த்திக்கு எதிராக வைக்கப்பட்ட வரி ஏமாற்று புகார் காரணமாக ரிஷிக்கு அரசியல் ரீதியாக சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீட்டிற்கு வரும் வருவாய்க்கு அக்சதா வரி கட்டவில்லை என்பதுதான் அவர் மீது வைக்கப்படும் புகார்.

ரிஷி சுனக்
அரசின் விலக்கை பயன்படுத்தி அக்சதா வெளிநாட்டு வருவாய்க்கு வரி கட்டவில்லை. இதன் மூலம் 20 மில்லியன் யூரோ வரை அவர் வரி கட்டாமல் ஏமாற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் இதை சட்டப்படிதான் செய்துள்ளார். அரசு மூலம் இவருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ரிஷி தனது நிதித்துறை அதிகாரத்தை பயன்படுத்தி தனது மனைவிக்கு வரி விலக்கு பெற்றுக்கொடுத்ததாக புகார்கள் வைக்கப்பட்டுள்ளன.

அக்சதா
இந்த விவகாரம் இங்கிலாந்தை உலுக்கி உள்ள நிலையில்தான் அக்சதா அந்நாட்டின் ராணி எலிசபெத்தை விட அதிக சொத்து கொண்டவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அக்சதா மூர்த்தி வேறு யாரும் கிடையாது.. இன்போசிஸ் இணை நிறுவனர் என் ஆர் நாராயண மூர்த்தியின் மக்கள்தான். 1981ல் இன்போசிஸ் நிறுவனத்தை நாராயண மூர்த்தி தனது மனைவி சுதாவிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி தொடங்கினார்.

அக்சதா யார்?
இப்போது உலகில் டாப் ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ் உள்ளது. இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 100 பில்லியன் டாலருக்கு அதிகம் ஆகும். இந்த நிறுவனம் வால் ஸ்ட்ரீட் பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்திய நிறுவனம் ஆகும். இவரின் மனைவி சுதா டாடா நிறுவனத்தில் பணியாற்றிய முதல் பெண் பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்சதா தனது கணவர் ரிஷியை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்போசிஸ்
பெற்றோர்கள் சம்மதத்தோடு பிரிட்டிஷ் சவுதாம்ப்டன் பகுதியில் வசித்து வந்த குடும்பம் மருத்துவரின் மகனான ரிஷியை அக்சதா மணந்தார். அந்த ரிஷிதான் இப்போது அந்நாட்டின் நிதித்துறை அமைச்சராக இருக்கிறார். இருவரும் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலையில் ஒன்றாக படிக்கும் போது காதலில் விழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனம் தங்களின் பங்கு மதிப்பு விவரங்களை இப்போது வெளியிட்டுள்ளது.

சொத்து என்ன?
அதில் அக்சதா மொத்தம் 1 பில்லியன் டாலர் பங்கு மதிப்பை வைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் அக்சதா அந்நாட்டு ராணி எலிசபெத்தை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராகி உள்ளார். எலிசபெத் ராணிக்கு 460 மில்லியன் டாலர் மட்டுமே சொத்து உள்ளது. இதன் மூலம் அந்த நாட்டின் பணக்கார பெண்ணாக அக்சதா உருவெடுத்துள்ளார். அவர் மீது வரி ஏய்ப்பு புகார் உள்ள நிலையில்தான் இந்த ரிப்போர்ட் வந்துள்ளார். ஆனால் அவர் இதுவரை செலுத்ததாக வரிகளை எல்லாம் செலுத்தினாலும் ராணியை விட அதிக சொத்து கொண்டு இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications