காஷ்மீரில் 370 நீக்க விவகாரம்.. தீர்மானம் கொண்டு வருகிறது ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம்
Recommended Video
லண்டன்: காஷ்மீர் மறுசீரமைப்பை எதிர்த்து இந்தியாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
நரேந்திர மோடியாக பிரதமர் பொறுப்பேற்ற இந்த ஆறரை ஆண்டுகளில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலும் சர்வதேச நாடுகளால் கண்டனத்தை பெற்றவையாகும்.
கடந்த 2016-இல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்ததை இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளும் எதிர்ப்பை தெரிவித்தன. அது போல் காஷ்மீரில் பல ஆண்டுகளாக அமலில் இருந்த 370 சட்டப்பிரிவு கடந்த ஆண்டு நீக்கப்பட்டது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில்
இதுவும் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றது. இதை எதிர்த்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐநா சபையில் முறையிட்டார். அப்போது சில நாடுகள் கண்டித்தன. சில நாடுகள் இது இந்தியாவின் உள்விவகாரம் என கைவிரித்துவிட்டன. பாகிஸ்தான் பிரதமர் சீனாவுடன் சேர்ந்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எத்தனையோ முறை மன்றாடி பார்த்தார்.

இந்திய குடியுரிமை
ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இந்த நிலையில் குடியுரிமை சட்டதிருத்தம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பார்சிக்கள், புத்தர் மதத்தினர், சீக்கியர்கள் உள்ளிட்ட மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தீர்மானம்
இதை இந்திய எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது வெளிநாடுகளும் எதிர்க்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் குடியுரிமை சட்டம் பாரபட்சமானது என்றும் பிரிவினையை ஏற்படுத்தும் என்றும் ஜாதி, மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கக் கூடாது என்றும் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

ஜம்மு காஷ்மீர்
இந்த நிலையில் சர்வதேச விதிகளுக்கு எதிராகவும் மனித உரிமைதள் மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு எதிராகவும் இந்தியா எடுத்த அதிரடி முடிவுகளை ஐரோப்பிய யூனியன் பட்டியலிட்டுள்ளது. அதில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தும் ஒன்றாகும். உத்தரப்பிரதேசத்தில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் அனுபவித்த கொடுமைகள், தேசிய குடிமக்கள் பதிவேட்டால் மக்கள் படும் துயரம் ஆகியவை பட்டியலிடப்பட்டன. காஷ்மீர் விவகாரம் குறித்து கடந்த செப்டம்பர் மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications