செஞ்சது பெரிய தப்பு! ஒரே நாளில் 101 பேருடன் உடலுறவுக்கு பிறகு கண்ணீர் விட்ட ஆபாச பட நடிகை
லண்டன்: ஒரே நாளில் 101 ஆண்களுடன் உடலுறவு கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பைக் கிளப்பியவர் லில்லி பிலிப்ஸ். இதற்கிடையே தனது உலக சாதனை குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ள லில்லி பிலிப்ஸ், அன்றைய தினம் என்ன நடந்தது.. உலக சாதனையைச் சாத்தியமாக்கியது எப்படி என்பது குறித்து அவர் வினோதமான பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார்.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆபாசப் பட நடிகை லில்லி பிலிப்ஸ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரே நாளில் 101 ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்தார். அப்போது சர்வதேச அளவில் இது பேசுபொருளாக மாறியது. ஆனால் லில்லி பிளிப்ஸ் அது குறித்தெல்லாம் கவலைப்படாமல் அடுத்தடுத்த சர்ச்சையைக் கிளப்பி வருகிறார்.

லில்லி பிலிப்ஸ்
இதற்கிடையே ஒரே நாளில் 101 ஆண்களுடன் உடலுறவு கொண்ட பிறகு லில்லி பிலிப்ஸ் கண்ணீர்விட்டு அழுததாகக் கூறப்பட்டது. எதற்காக அவர் கண்ணீர்விட்டார் என்பது குறித்து நெட்டிசன்கள் பல வித கருத்துகளைக் கூறி வந்தனர். இதற்கிடையே அழுததற்கான உண்மையான காரணத்தை அவரே பேட்டி ஒன்றில் விளக்கியுள்ளார்.
இது தொடர்பாகப் பிரபல பிரிட்டன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு 23 வயதான லில்லி பிளிப்ஸ் அளித்த பேட்டியில், தான் செய்த சாதனை நினைத்ததை விடக் கடினமானதாக இருந்ததாகக் குறிப்பிட்டார். தனக்கு அதிக பாலியல் ஆசை இருந்தாலும் அதைத் தாண்டி, இது கடினமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் இதற்கு போதுமான அளவுக்குத் தயாராகவில்லை என்றும் இதன் காரணமாகவே கண்ணீர்விட்டு அழுததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
கண்ணீர்விட்டது ஏன்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எனக்கு மற்றவர்களைக் காட்டிலும் பாலியல் ஆசை அதிகம் இருப்பது உண்மை தான்.. எனக்கு பலதரப்பட்ட நபர்களுடன் தனிமையில் இருக்கப் பிடிக்கும். இதைச் சொல்வதில் எனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. நான் வேண்டும் என்றே கண்ணீர்விட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், அது இப்படி இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் அந்தளவுக்குத் தயாராக இருக்கவில்லை.
செய்த தவறு
எனது சாதனை நான் நினைத்ததை விட மிகவும் அதிக நேரம் எடுத்தது.. நான் எதிர்பார்த்த விட மிகவும் சோர்வாக இருந்தது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அந்த உலக சாதனை முயற்சிக்காக என்னை நான் தயார்ப்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை.. அதுவே நான் செய்த தவறு.. நான் போதியளவில் ரெடியாகி இருக்க வேண்டும். அதற்கு முன்பு ஒரே நாளில் அதிகபட்சம் 37 பேருடன் மட்டுமே தனிமையில் இருந்துள்ளேன். எனவே, நான் சொல்வது உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன்.
உணர்ச்சிவசப்பட்டு இருந்தேன்
ஒருவேளை இதன் காரணமாகவும் நான் உணர்ச்சிவசப்பட்டு இருக்கலாம். குறுகிய நேரத்தில் அத்தனை பேருடன் தனிமையில் இருப்பது நிஜமாகவே சாதாரண விஷயம் இல்லை. அது எனக்கு மிகவும் சோர்வான நாளாக இருந்தது. அன்று நான் போதுமான அளவு தயாராகவில்லை. அது நான் செய்த தவறு தான்.. ஒப்புக்கொள்கிறேன். சில நேரம் அலுவலகத்தில் நீங்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டி இருக்கும். அப்போது நீங்கள் மற்ற நாட்களை விட அதிகம் சோர்வடைந்துவிடுவீர்கள். எனக்கும் அதுபோன்ற ஒரு நாள் தான் அது" என்றார்.
தொடர்ந்து தனது சாதனை குறித்துப் பேசிய அவர், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால்.. பலவீனமான இதயம் கொண்டிருந்தால் என்னால் அந்த சாதனையைப் படைத்திருக்க முடியாது.. அது அந்தளவுக்குக் கடினமாக இருந்தது. அது ஒரு வித்தியாசமான உணர்வு. அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications