உங்களுக்கு ஆகஸ்ட் 22 வரை ஜெயில்தான்.. உறுதியாக சொன்ன நீதிமன்றம்.. நல்லது, நன்றி.. கூல் நீரவ் மோடி
லண்டன்: வங்கி மோசடி வழக்கில் தொடர்புள்ள, வைர வியாபாரி நீரவ் மோடிக்கு ஆகஸ்ட் 22ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அளவுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணமோசடி செய்த வழக்கு தொடர்பாக இந்தியாவிலிருந்து இங்கிலாந்து தப்பியோடியவர் வைர வியாபாரி நீரவ் மோடி.

இவரை இந்தியா அழைத்துவர அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அந்த நாட்டு போலீசாரால் நீரவ் மோடி கைது செய்யப்பட்டார். வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிபதி முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
வாண்ட்ஸ்வொர்த் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வழியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் நீரவ் மோடி. இதையடுத்து, நீதிபதி நீரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 22 வரை நீட்டித்தார்.
48 வயதான மோடி, கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டதிலிருந்து தென்மேற்கு லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார். பணமோசடி வழக்கு தொடர்பாக இவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் கடந்த மாத தொடக்கத்தில் நிராகரித்தது. அதன் பின்னர் அவர் முதல் முறையாக இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
"ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்குள் நாங்கள் உங்களுக்காக ஒரு தேதியை அறிவிப்போம். நீங்கள் எதை நோக்கிச் செல்கிறீர்கள் என்பது உங்களுக்கு அப்போது தெரியும்" என்று நீதிபதி மோடியிடம் கூறினார்.
"நல்லது, நன்றி" என்று சிரித்தபடி பதில் சொன்னார் நீரவ் மோடி.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications