2 பேருக்கு டெஸ்ட்.. கொரோனாவைரஸ் தடுப்பூசி.. சோதனையைத் தொடங்கியது ஆக்ஸ்போர்ட்
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த இரு நோயாளிகளுக்கு தாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசியைப் போட்டு மனித உடலில் சோதனையைத் தொடங்கியுள்ளது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்.
Recommended Video
கொரோனாவைரஸுக்கான மருந்து என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து சரமாரியாக பல்லாயிரக்கணக்கான உயிர்களை தினசரி இழந்து வருகிறோம்.

மறுபக்கம் பல்வேறு நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளன. இந்த நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் புதிய தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஜென்னர் தடுப்பூசி ஆய்வு நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியின் பெயர் ChAdOx1 nCoV-19. இந்த தடுப்பூசியைத்தான் இன்று சோதனைக்குள்ளாக்கியுள்ளது ஆக்ஸ்போர்ட்.
இந்த தடுப்பூசி நமது உடலில் சென்று எப்படி செயல்படும், எப்படி கொரோனா வராமல் தடுக்கும் என்ற விவரம் அறிய கீழ்க்கண்ட இணைப்புக்குள் செல்லவும்.

இன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட 2 நோயாளிகளில் ஒருவரது பெயர் எலிசா கிரான்டோ. ஐரோப்பிய நாடுகளில் நடந்துள்ள முதல் மனித சோதனை தடுப்பூசி இதுதான். மொத்தம் 800 பேருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு சோதனை செய்யப்படவுள்ளது. அதில் பாதிப் பேருக்கு கோவிட் 19 தடுப்பூசி போடப்படும். பாதிப் பேருக்கு மூளைக் காய்ச்சலுக்கான தடுப்பூசி போடப்படும். யாருக்கு எந்த ஊசி போடப்பட்டது என்று யாருக்கும் தெரிவிக்கப்பட மாட்டாது.












Click it and Unblock the Notifications