3ஆம் உலகப் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.. இங்கிலாந்து ராணுவ தளபதி வார்னிங்!
லண்டன்: 3ஆம் உலகப் போர் ஏற்படுத்துவதற்கான ஆபத்து உண்மையில் உள்ளதாக இங்கிலாந்து முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் நிக் கார்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் நிக் கார்டர் ஒரு செய்தி நிறுவனத்திற்கு கூறுகையில் பொருளாதார நெருக்கடிகள் பல காலங்களில் பாதுகாப்பு நெருக்கடிக்கு கொண்டு சென்றுள்ளன.
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக உலகப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த சூழல் பாதுகாப்பு நெருக்கடியை உண்டாக்கும். நாம் அனைவரும் தற்போது மிகவும் நிச்சயமற்ற உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உண்மையான ஆபத்து
தற்போது பல பகுதிகளில் நடந்து வரும் மோதல்கள் தவறான முடிவுகள் காரணமாக மிக விரைவில் முழுமையான போராக மாற அதிக வாய்ப்புகள் உள்ளன. இதுதான் தற்போது மிகவும் உண்மையான ஆபத்து. அதிலிருந்து நாம் பாதுகாக்க வேண்டும்.

ஆயுதங்கள்
சண்டையில் ஈடுபடுவோர் தங்கள் செயல்களால் போர் ஏற்படலாம் என்ற உண்மைநிலையைப் புரிந்து கொள்ளாமல் செயல்படுகிறார்கள். இதனால் நீங்கள் கட்டுப்படுத்துவதற்கு முன்னதாகவே அதிக அளவிலான நபர்களும், ஆயுதங்களும் சண்டையில் ஈடுபடுத்தப்படலாம்.

ஆபத்துகள்
இது நாடுகளுக்கு இடையே முழுமையான போருக்கு நம்மை கொண்டு செல்லும். வரலாற்று நிகழ்வு மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். 3ஆம் உலகப் போர் உண்மையிலேயே ஏற்படுமா என்றால் அதற்கான ஆபத்துகள் உள்ளது என்றே கூறுகிறேன்.

கவனம்
அந்த அபாயங்கள் குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். வரலாற்றை திருப்பி பார்க்கும்போது நீங்கள் அதிலிருந்து உங்கள் அனுபவங்களை கற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய உலகின் பல பகுதிகளில் நடந்து வரும் பிராந்திய மோதல்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வழிவகுக்கும்
இது போன்ற மோதல்கள் உலக போருக்கு வழிவகுக்கலாம் என்றார். பிராந்திய மோதல்கள் எவை என்பது குறித்து தளபதி கார்டர் தெளிவுப்படுத்தவில்லை என்றாலும் அர்மீனியா- அசர்பைஜன் மோதல். சிரியாவில் ரஷ்யா, ஈரான், அமெரிக்கா, இங்கிலாந்து படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications