3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு.. பிளாக் ஹோல் பற்றிய கண்டுபிடிப்புக்காக அறிவிப்பு
லண்டன்: பிளாக் ஹோல் (கருந்துளை) பற்றிய ஆய்வு முடிவுகளுக்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு 2020ம் ஆண்டின், இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஜர் பென்ரோஸ் (பிரிட்டன்), ரெய்ன்ஹார்ட் ஜென்செல் (ஜெர்மனி) மற்றும் ஆண்ட்ரியா கெஸ் (அமெரிக்கா) ஆகியோர் நோபல் பரிசை பகிர்கிறார்கள். இவர்களுக்கு, 24 864,200 பவுண்ட் பரிசுத் தொகை கிடைக்கும்.

இயற்பியல் நோபல் பரிசுக் குழுவின் தலைவரான டேவிட் ஹவிலண்ட், ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோம் நகரில், இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசுகையில், இந்த ஆண்டு விருது "பிரபஞ்சத்தின் மிகவும் கவர்ச்சியான பொருட்களில் ஒன்றை பற்றியது" என்று தெரிவித்தார்.
ஆம்.. உலகின் பல மக்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் பிளாக் ஹோல் கோட்பாடு பற்றிய ஆய்வுகளில் இம்மூவரின் பங்களிப்பு அபாரமானது என்பதால், டேவிட் ஹவிலண்ட் குறிப்பிட்ட முன்னுரை மிகவும் பொருத்தமானதுதான்.
பிளாக் ஹோல்கள் என்பது, விஞ்ஞானி ஆல்பர்ட்டின் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டின், தவிர்க்க முடியாத விளைவு என்பதை ரோஜர் பென்ரோஸ் நிரூபித்தார்.
ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு என்னவென்றால், பூமியைச் சுற்றியுள்ள விண்வெளியின் நேரம் கிரகத்தின் சுழற்சியால் திசை திருப்பப்படும் என்பதுதான். பெரிய பொருள்கள் விண்வெளி நேரத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன, இது ஈர்ப்பு விசையாக உணரப்படுகிறது என்று ஐன்ஸ்டீன் தனது ஆய்வில் தெரிவித்திருந்தார்.
ரெய்ன்ஹார்ட் ஜென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் ஆகியோர் நமது விண்மீனின் மையத்தில் பால்வெளியில் அமைந்து உள்ள அதிசயமான கருந்துளைக்கு மேலும் உறுதியான ஆதாரங்களை வழங்கினர்.
Sagittarius A என அழைக்கப்படும் பிரமாண்டமான பொருள் (கருந்துளை), பால்வெளியின் மையத்தில் இருந்தபடி, அதைச் சுற்றி வரும் நட்சத்திரங்களை இழுத்து விடுவதை இவர்கள் உறுதி செய்தனர். பிளாக் ஹோல் குறித்த ஆதாரப்பூர்வ ஆவணமாக இந்த கோட்பாடு பார்க்கப்படுகிறது. எனவே இம்மூவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசை வெல்கிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications