விவசாயிகளுக்கு ஆதரவாக இறங்கிய ராணுவ டேங்க்! லண்டனில் உச்சக்கட்ட பதற்றம்! என்ன நடக்கிறது
லண்டன்: நமது நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த 2020-2021 காலகட்டத்தில் மிகப் பெரியளவில் விவசாயிகள் போராட்டம் நடந்தது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அதேபோன்ற ஒரு போராட்டம் இப்போது பிரிட்டன் தலைநகர் லண்டனிலும் ஆரம்பித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அங்குப் போராட்டத்திற்காக டிராக்டர்கள் திரண்டுள்ள நிலையில், அத்துடன் ராணுவ டாங்க் ஒன்றும் போராட்ட களத்திற்கு வந்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 2020-2021 காலகட்டத்தில் மிகப் பெரிய போராட்டம் நடத்தியது அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

போராட்டம்:
இப்போது கிட்டதட்ட அதேபோன்ற ஒரு போராட்டம் தான் பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஆரம்பித்துள்ளது. அந்நாட்டு அரசுக்கு எதிராகப் பல நூறு டிராக்டர்களில் திரண்டுள்ள மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். எதற்காக இந்த போராட்டம், இதில் ராணுவ டேங்க் வந்தது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பிரிட்டன் நாட்டில் இப்போது தொழிலாளர் கட்சி ஆட்சியில் இருக்கிறது. கீர் ஸ்டார்மர் பிரதமராக இருக்கிறார். அவர் சமீபத்தில் புதிதாக விவசாயிகள் தொடர்பாகப் பரம்பரை வரி ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதாவது ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் மதிப்புள்ள விவசாய பண்ணைகளுக்கு 20% பரம்பரை வரி விதிக்கப் போவதாக அறிவித்தார்.
அதென்ன பரம்பரை வரி:
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் நமது நாட்டில் பெற்றோர் உயிரிழக்கும் போது, அவர்கள் சொத்து வாரிசுகளுக்கு வந்துவிடும். இதற்கு எந்தவொரு வரியும் இல்லை. இதுபோல பெற்றோரின் விவசாய பண்ணைகள், பிள்ளைகளுக்கு வரும் போது அதற்கு மொத்த சொத்தில் 20%ஐ வரியாகச் செலுத்த வேண்டும் என்பதே இந்த விதியாகும். அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்த வரியை அமலுக்குக் கொண்டு வரப் பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்பட்டது.
இந்த வரிக்கு எதிர்ப்பு தெரிவித்தே பிரிட்டன் நாட்டில் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மத்திய லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தை டிராக்டர்களுடன் அடைந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் பல நூறு டிராக்டர்கள் நாடாளுமன்ற சதுக்கத்தை முற்றுகையிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வாகன போக்குவரத்தும் மொத்தமாக முடங்கியுள்ளது.

ராணுவ டேங்க்:
இதற்கிடையே விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் போராட்ட களத்திற்கு ராணுவ டேங்கும் இணைந்துள்ளது. அதில் "எங்கள் விவசாயிகளுடன்" என்ற போர்டும் இருக்கிறது. அந்த ராணுவ டேங்க் யாருக்குச் சொந்தமானது. எப்படி திடீரென போராட்ட களத்திற்கு வந்தது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
விவசாயிகள் அழிந்து போவார்கள்:
அதேநேரம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், இந்த வரியை ரத்து செய்வதாகப் பிரிட்டன் அரசு அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். பரம்பரை வரி விதிக்கப்பட்டால் அது விவசாய குடும்பங்களை மொத்தமாக அழித்துவிடும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர். தலைமுறை தலைமுறையாக விவசாயம் பார்த்து வரும் குடும்பங்கள், வரி செலுத்த நிலங்களை விற்க வேண்டி இருக்கும் என்றும் இதனால் விவசாயம் மெல்ல அழியும் என்றும் கூறி வருகின்றனர்.
கடந்தாண்டு தான் பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி மற்றும் போலந்து உட்பட ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினர். இப்போது ஓராண்டிற்குள் மீண்டும் அதேபோன்ற போராட்டத்தை விவசாயிகள் ஆரம்பித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications