தயவு செய்து வாங்கிக்கோங்க.. முழு கடனையும் செலுத்தி விடுகிறேன்- விஜய் மல்லையா திடீர் சரண்டர்
லண்டன்: முழு கடனையும் அடைத்து விடுகிறேன். அதைத் திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று வங்கிகளுக்கு விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடியை கடனாக பெற்ற விஜய் மல்லையா அக்கடன்களை திரும்ப செலுத்தாமலேயே லண்டனுக்கு தப்பி சென்றுவிட்டார். அவரை நாடு கடத்துவது குறித்து இந்தியா வழக்கு தொடுத்துள்ளது.
இந்த நிலையில் ஒரு வங்கியில் வாங்கிய ரூ.113 கோடி கடனுக்காக லண்டனில் உள்ள அவரது சொகுசு பங்களா ஒன்று ஏலத்துக்கு போவதாக தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில் தான் பெற்ற கடன் முழுவதையும் அடைத்துவிடுவதாக விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களின் பணம்
மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் நான் நாடு கடத்தப்படுவது குறித்து பல செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதை சட்டப்பபூர்வமாக நான் எதிர்கொண்டு வருகிறேன். இங்கு முக்கிய விஷயம் மக்களின் வரிப்பணம்.
|
டுவிட்டரில் வேண்டுகோள்
அந்த பணத்தை நான் முழுவதுமாக செலுத்திவிடுகிறேன். வங்கிகளும் அரசும் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

முக்கியத்துவம்
அகஸ்டா வெஸ்ட்லாந்து நிறுவனத்தின் சொகுசு ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இங்கிலாந்தைச் சார்ந்த கிரிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் துபாயிலிருந்து இந்தியாவுக்கு நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே, தான் பெற்றக் கடனை முழுவதுமாக திரும்பச் செலுத்துவதாகவும் அதை வங்கிகளும் அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நடவடிக்கை
மேலும் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி உள்ள மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோரையும் நாடு கடத்த இந்தியா நடவடிக்கைகளை எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது. விஜய் மல்லையா டுவிட்டர் பதிவுக்கு இந்திய அரசு எத்தகைய முடிவு எடுக்கும் என்பது இனிதான் தெரியவரும்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
கடன் vs முதலீடு.. நிம்மதியாக தூங்க இதுதான் பார்முலா.. எதை செய்தால் நமக்கு லாபம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications