விவசாயக் கழிவுகளை எரித்த விவகாரம்.. உத்தரப்பிரதேச விவசாயிகள் 16 பேர் கைது
லக்னோ: விவசாயக் கழிவுகளை எரித்ததாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் காற்று மாசால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சுவாசிக்கக் கூடிய காற்றை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட அண்டைய மாநிலங்கள் விவசாயிகள் பயிர் அறுவடைக்கு பிறகு மீதமுள்ள கழிவுகளை அகற்ற அதிகம் செலவிட வேண்டிய நிலை உள்ளதால் அந்த கழிவுகளை எரித்து விடுகின்றனர்.

இதுவே காற்று மாசுவுக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி விவசாயிகள் நிலக் கழிவுகளை எரித்தால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் விவசாயிகள் தங்கள் பயிர் நிலத்தில் உள்ள கழிவுகளை எரித்தனர். இதையடுத்து புகாரின் பேரில் 16 விவசாயிகளை கைது செய்தனர்.
மேலும் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதை கண்டுக் கொள்ளாத வருவாய் அதிகாரிகள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு விவசாயக் கழிவுகளை எரித்ததாக செயற்கைகோள் மூலம் கண்டுபிடித்து 1046 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஆனால் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை சற்று குறைந்து 459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications