திடீரென வந்த வெடி சத்தம்.. உ.பி.யில் நொடிப்பொழுதில் ஆக்சிஜன் மையத்தில் மூன்று பேர் பலியான சோகம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஆக்சிஜன் நிரம்பும் மையத்தில் திடீரென ஆக்சிஜன் சிலிண்டர்கள் திடீரென வெடித்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
நாட்டில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சின் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் சின்ஹாட் என்ற பகுதியில் ஆக்சிஜன் நிரப்பும் மையத்தில் திடீரென ஆக்சிஜன் சிலிண்டர்கள் திடீரென வெடித்ததில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் கமிஷனர் டிகே தாக்கூர் தெரிவித்தார்.

இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்த கலெக்டர், கூடுதல் டிசிபி, தலைமை தீயணைப்பு ஆய்வாளர், மருந்து ஆய்வாளர், கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications