லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீரென வந்த வெடி சத்தம்.. உ.பி.யில் நொடிப்பொழுதில் ஆக்சிஜன் மையத்தில் மூன்று பேர் பலியான சோகம்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஆக்சிஜன் நிரம்பும் மையத்தில் திடீரென ஆக்சிஜன் சிலிண்டர்கள் திடீரென வெடித்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சின் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது.

'இது மூடி மறைக்கப்படும் பச்சை படுகொலை'.. ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள்... விளாசும் ராகுல் காந்தி'இது மூடி மறைக்கப்படும் பச்சை படுகொலை'.. ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள்... விளாசும் ராகுல் காந்தி

3 killed and many injured as jumbo cylinders burst at oxygen plant in Uttar Pradesh

இந்நிலையில், உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் சின்ஹாட் என்ற பகுதியில் ஆக்சிஜன் நிரப்பும் மையத்தில் திடீரென ஆக்சிஜன் சிலிண்டர்கள் திடீரென வெடித்ததில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் கமிஷனர் டிகே தாக்கூர் தெரிவித்தார்.

3 killed and many injured as jumbo cylinders burst at oxygen plant in Uttar Pradesh

இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்த கலெக்டர், கூடுதல் டிசிபி, தலைமை தீயணைப்பு ஆய்வாளர், மருந்து ஆய்வாளர், கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

English summary
3 killed in an accident in Uttar Pradesh oxygen plant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X