காற்றில் பறந்த விதிமுறைகள்.. மாஸ்க்குகளைகூட அணியாமல்.. மதகுரு இறுதி சடங்கில் கூடிய ஆயிரக்கணக்கானோர்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் மத குருவின் இறுதிச் சடங்கிற்கு ஆயிரக் கணக்கானோர் ஒரே இடத்தில் ஒன்றுகூடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 3.48 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், பதிவு செய்யப்படும் கொரோனா பாதிப்பைவிட உண்மையான கொரோனா பாதிப்பு 5 முதல் 10 மடங்கு வரை அதிகமாக இருக்கும் என்றே இந்திய மருத்துவ கழகம் உள்ளிட்ட வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

மதகுரு
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் மத குருவின் இறுதிச் சடங்கிற்கு ஆயிரக் கணக்கானோர் ஒரே இடத்தில் ஒன்றுகூடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பதாபூன் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இஸ்லாமிய மதகுரு அப்துல் ஹமீத் முகமது சலீமுல் காத்ரி உயிரிழந்துள்ளார்.

மாஸ்க்குகளை கூட அணியவில்லை
அதைத் தொடர்ந்து அவர் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடியுள்ளனர். கொரோனா விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல், மாஸ்க்குகளைகூட அணியாமல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது சட்டப் பிரிவு 188 மற்றும் 144 விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு போலீசார் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
|
நடவடிக்கை இல்லை
இதையடுத்து இந்தச் சம்பவம் பற்றி விசாரிக்க 3 பேர் கொண்ட போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. மதகுரு உயிரிழந்ததால் பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவார்கள் என்பது போலீசாருக்கு தெரிந்திருந்தும் அதைத் தடுக்க எவ்வித நடவடிக்கைகளையும் போலீசார் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்களால் உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications