சாதகமாக வந்த தீர்ப்பு.. இனி எல்லாம் அதிரடிதான்.. பல நாள் கனவை நினைவாக்கும் பிரதமர் மோடி!
லக்னோ: அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்துள்ளதை அடுத்து பிரதமர் மோடி விரைவில் அயோத்திக்கு செல்வார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகலாம்.
அயோத்தி வழக்கில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் காலை 10.30 மணிக்கு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் இந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பு காரணமாக நாடு முழுக்க பாதுகாப்பு போடப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

தீர்ப்பு வழங்கினார்கள்
அதன்படி, அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தின் மீது இந்து அமைப்பான ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்பிற்கு அந்த உரிமை உள்ளது. அங்கு ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அயோத்தி வழக்கில் அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

மோடி செல்லவில்லை
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராமல் இருந்த நிலையில் அங்கு பிரதமர் மோடி செல்லாமலே தவிர்த்து வந்தார். தேர்தல் நேரத்தில் மட்டும் சென்றவர், தேர்தலுக்கு பின் அங்கு செல்லவே இல்லை. அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்த பின்தான் மோடி அயோத்தி செல்வார் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கண்டிப்பாக செல்கிறார்
இந்த நிலையில் இன்னும் சில வாரங்களில் பிரதமர் மோடி அயோத்தி செல்வார் என்று கூறப்படுகிறது. முதலில் பிரதமர் மோடி தீபாவளியை அயோத்தியில் கொண்டாடுவார் என்று செய்திகள் வந்தது. ஆனால் தற்போது தீபாவளியை காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அயோத்தி தீர்ப்பு வந்துள்ளதால், விரைவில் மோடி அயோத்தி செல்வார், அங்கு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்கிறார்கள்.

மக்கள் முன்னிலையில்
அயோத்தியில் பெரிய விழா போல நடத்தி, அங்கு மக்கள் முன்னிலையில் மோடி பேசுவார், பாஜகவின் சாதனைகளை பட்டியலிடுவார் என்றும் கூறுகிறார்கள். ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் இன்னும் 3 மாதங்களில் தொடங்க வாய்ப்புள்ளது. அதற்கு முன் மோடியின் அயோத்தி பயணம் அதிக கவனம் பெறும் என்று குறிப்பிடுகிறார்கள்.

பல நாள்
பிரதமர் மோடி அயோத்தி சென்றுவிட்டு பின் வாரணாசி செல்ல இருக்கிறார். அங்கு தொகுதி மக்கள் முன்னிலையில் பேசுவார் என்கிறார்கள். பிரதமர் மோடி குஜராத் மாநில அரசியலில் இருந்தே போதே ராமர் கோவில் குறித்து பல மேடைகளில் பேசி, வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது தற்போது நினைவாகும் சூழல் உருவாகி உள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications