பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு இன்று... அத்வானி குற்றவாளி எனில் 5 ஆண்டு சிறை தண்டனையாம்!
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முன்னாள் துணை பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.
1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான கிரிமினல் வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் இன்று தீர்ப்பளிக்கிறார். 28 ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் வழக்கில் இன்று லக்னோ சிறப்பு நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனையொட்டி லக்னோ நீதிமன்ற வளாகத்தில் 2,000க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குற்றவாளி எனில் அத்வானிக்கு 5 ஆண்டு ஜெயில்
இன்றைய தீர்ப்பில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கட்டியார், சாத்வி உள்ளிட்டோர் குற்றவாளிகள் எனில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.

கல்யாண்சிங்குக்கு 3 ஆண்டு சிறை?
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் ஆளுநரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான கல்யாண்சிங், சாக்சி மகாராஜ், அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் ஶ்ரீவஸ்தவா ஆகியோர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு வாய்ப்பு உள்ளதாம்.

பாஜக எம்.பிக்களுக்கு ஆயுள் கிடைக்குமாம்
குற்றவியல் நடைமுறை சட்டம் 395-ன் கீழ் குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்பிக்கள் பிரிஜ் பூஷன் சரண்சிங், லல்லு சிங் உள்ளிட்ட 17 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டால் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்கின்றன நீதித்துறை வட்டாரங்கள். பிரிஜ் பூஷன் சரண்சிங், லல்லு சிங் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால் அவர்களது எம்.பி. பதவிகள் பறிபோகும்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகின்றனர்
மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டால் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அவர்களுக்கு அவகாசம் வழங்கப்படும். கொரோனா பாதிப்பு காலம் என்பதால் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண்சிங் உள்ளிட்ட பலர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்றைய விசாரணையில் ஆஜராக உள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications