உ.பி. வளர்ச்சி குறியீடுகளில் பரேலி மாவட்டம் முதலிடம்.. முதல்வர் யோகியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி
லக்னோ: உத்தரபிரதேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறியீடுகளில் பரேலி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது நேரடி கண்காணிப்பின் கீழ் பரேலியை கொண்டு வந்ததே இந்த வளர்ச்சிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
ஒருகாலத்தில் மிகவும் பின்தங்கியிருந்த பிராந்தியமாக இருந்த பரேலி, தற்போது கல்வி, சுகாதாரம் என அனைத்து குறியீடுகளிலும் முன்னிலையில் இருப்பது அங்குள்ள மக்களுக்கு புதிய உற்சாகத்தை தந்துள்ளது.
இதனிடையே, பரேலியை போல மேலும் சில பின்தங்கிய மாவட்டங்களை தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர போவதாக உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

சூளுரைத்த யோகி ஆதித்யநாத்
இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் பின்தங்கிய நிலையில் இருந்தது. இந்நிலையில், முதல்வர் யோகி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதலாக வளர்ச்சிப் பாதையை நோக்கி உத்தரபிரதேசம் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேசத்தை நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக மாற்றிக் காட்டுகிறேன் என சூளுரைத்தார்.

தனித்தனியாக பிரித்து..
அதன் தொடர்ச்சியாக, உத்தரபிரதேசத்தில் வளர்ச்சிப் பணிகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்வதை பார்க்க முடிகிறது. குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகள் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார் யோகி ஆதித்யநாத். உத்தரபிரதேசம் மிகப்பெரிய மாநிலம் என்பதால், சில பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்படுவதை உணர்ந்த யோகி ஆதித்யநாத், மாநிலத்தை தனித்தனி பிராந்தியங்களாக பிரித்து ஒவ்வொரு திட்டங்களாக செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அண்மையில் உத்தரவிட்டார்.

முதல்வர் நேரடி கண்காணிப்பு
இந்நிலையில், உபியில் பின்தங்கிய பகுதியாக இருந்த பரேலியை தனது நேரடி கண்காணிப்பில் யோகி கொண்டு வந்தார். அங்கு அரசின் திட்டங்கள் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என அவர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, அரசு அதிகாரிகளும் அங்கு முழுவீச்சில் இறங்கி பணியாற்றினர். மற்ற மாவட்டங்களிலும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு உபி முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வில், அனைத்து பிராந்தியங்களையும் விட பரேலி பகுதி எல்லா வளர்ச்சிக் குறியீடுகளிலும் முதலிடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

பரேலி முதலிடம்
பரேலியில் விவசாயிகளின் மின்சார செலவை குறைப்பதற்காக 976 சோலார் நீர் பாசன பம்புகள் பொருத்தப்பட்டுள்ளன. அதுதவிர, 8 லட்சத்து 27 ஆயிரத்து 109 விவசாயிகளுக்கு பயிர் விளைவித்தல் குறித்த ஆலோசனைகள் நிபுணர்களால் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. பசு பாதுகாப்பு திட்டத்தின் கழ் 61,383 கால்நடைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும், அங்கு 496 சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் ஏழை எளிய மக்கள் அங்கு இலவசமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல பல நடவடிக்கைகளை அரசு எடுத்திருப்பதால் அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் பரேலி முதலிடத்தை பெற்றிருக்கிறது. பரேலிக்கு அடுத்ததாக சஹாரன்பூர், வாரணாசி, லக்னோ, மீரட் ஆகிய பகுதிகளும் வளர்ச்சிக் குறியீடுகள் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications