உ.பி. உள்ளாட்சி தேர்தல்.. பாஜக அமோக வெற்றி.. மோசடி வெற்றி என அகிலேஷ் புகார்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 825 ஊராட்சி தலைவர் பதவிகளில் 635 பதவிகளில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
இதன் தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகின. இந்த நிலையில் மொத்தமுள்ள 75 மாவட்ட தலைவர் இடங்களில் பாஜக 67 இடங்களை பிடித்து அமோக வெற்றி கண்டுள்ளது. 74 மாவட்டங்களில் 825 ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அதில் பாஜக கூட்டணி 635 இடங்களில் வென்றுள்ளது. 735 இடங்களில் பாஜகவும் 14 இடங்களில் அதன் கூட்டணி கட்சியும் போட்டியிட்டது.
இந்த தேர்தல் வெற்றி மோசடியானது என முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியிருந்தார். நேற்று வாக்கு எண்ணிக்கையின் போது பாஜக- சமாஜ்வாதி கட்சியினரிடையே வன்முறை வெடித்தது.












Click it and Unblock the Notifications