டிரைவர் தூங்கியதால் விபரீதம்.. வேகமாக உருண்டு வந்த கார் மோதி மூதாட்டி பலி.. பரபர சிசிடிசி காட்சி!
உத்தர பிரதேசத்தில் வேகமாக உருண்டு வந்த கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் வேகமாக உருண்டு வந்த கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள முசாபர் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்று அதிகாலை முசாபர் நகர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த பரபரப்பு விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
வேகமாக உருண்டு வந்த கார் சாலை ஓரம் நடந்து சென்ற மூதாட்டி மீது மோதியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
|
ஏன் இப்படி
வாகனம் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தை இப்படி வேகமாக் உருண்டு வந்துள்ளது. இவர் தூங்கிய காரணத்தால் வண்டி கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. அந்த வாகன ஓட்டுநர் இரவு முழுக்க அந்த காரை ஓட்டி வந்துள்ளார்.

பலி
இதன் காரணமாகவே அந்த கார் அந்த மூதாட்டி மீது மோதியுள்ளது. நடைபயிற்சிக்காக மூதாட்டி அங்கு சென்றுள்ளார். இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு பதியப்பட்டுள்ளது
தற்போது அந்த வாகன ஓட்டுநர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. ஆனாலும் அவர் இன்னும் கைதாகவில்லை. அவருக்கு தலையில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டு இருப்பதால் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிசிடிவி காட்சி
இது தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. அங்கு இருந்து சிசிடிவி கேமராவில் அனைத்து விஷயங்களும் பதிவாகி இருந்துள்ளது. அது வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.












Click it and Unblock the Notifications