உ.பி. லக்னோ ஏர்போர்ட்: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தரையில் அமர்ந்து போராட்டம்- திடீர் பரபரப்பு!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்துக்குள் தம்மை நுழையவிடாமல் தடுத்ததைக் கண்டித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் லக்னோ விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
உ.பி. லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 3 விவசாயிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. லக்கிம்பூர் விவசாயிகளை சந்திக்க சென்ற அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர்.

பிரியங்கா கைது
லக்கிம்பூர் செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று அதிகாலை தடுத்து நிறுத்தப்பட்டார். இதனையடுத்து அவர் தடுப்பு காவலில் அடைத்து வைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்து தமிழகம் உட்பட நாடு முழுவ்தும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அகிலேஷ் தடுத்து நிறுத்தம்
அதேபோல் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், லக்கிம்பூர் செல்வதைத் தடுத்து வீட்டு காவலில் வைக்கப்பட்டார். இதனைக் கண்டித்து சமாஜ்வாதி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது அகிலேஷ் யாதவ் வீட்டு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது.

பாஜகவை அகற்றுவோம்- அகிலேஷ்
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளதாவது; உ.பி.யில் ஆளும் பாஜக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் சமாஜ்வாதி கட்சியினர் விஜய் யாத்திரை நடத்த உள்ளோம். குற்றவாளிகளை நீதியின் முன்பாக ஆளும் பா.ஜ.க. அரசு முன்னிறுத்தும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. இந்த பாஜகவை அதிகாரத்தில் இருந்து விவசாயிகள் தூக்கி எறிய வேண்டிய தருணம் இது. மத்திய அமைச்சர் அஜிஸ் மிஸ்ராவின் மகன், வன்முறை நடைபெற்ற இடத்தில்தான் இருந்தார் என்பதற்கான ஆதாரங்களாக வீடியோக்கள் இருக்கின்றன. மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அஜிஸ் மிஸ்ரா நீடிக்கும் வரை எப்படி போலீசாரால் அவரது வீட்டுக்குள் நுழையும் முடியும்? ஆகையால் அஜிஸ் மிஸ்ரா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

ஏர்போர்ட்டில் பூபேஷ் பாகல் போராட்டம்
இந்நிலையில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், உத்தரப்பிரதேசம் பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் உ.பி. அரசோ, லக்கிம்பூர் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என நேற்றே திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று லக்னோ விமான நிலையத்துக்கு பூபேஷ் பாகல் வருகை தந்தார். இருப்பினும் அவரை உ.பி..க்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் லக்னோ விமான நிலையத்திலேயே தரையிலேயே அமர்ந்து பூபேஷ் பாகல் போராட்டம் நடத்தினார். அப்போது பேசிய பூபேஷ் பாகல், கைது செய்யப்பட்ட பிரியங்காவை சந்திக்க அனுமதி மறுக்கிறது உ.பி. பாஜக அரசு என குற்றம் சாட்டினார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications