உ.பி. லக்னோ ஏர்போர்ட்: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தரையில் அமர்ந்து போராட்டம்- திடீர் பரபரப்பு!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்துக்குள் தம்மை நுழையவிடாமல் தடுத்ததைக் கண்டித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் லக்னோ விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
உ.பி. லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 3 விவசாயிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. லக்கிம்பூர் விவசாயிகளை சந்திக்க சென்ற அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர்.

பிரியங்கா கைது
லக்கிம்பூர் செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று அதிகாலை தடுத்து நிறுத்தப்பட்டார். இதனையடுத்து அவர் தடுப்பு காவலில் அடைத்து வைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்து தமிழகம் உட்பட நாடு முழுவ்தும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அகிலேஷ் தடுத்து நிறுத்தம்
அதேபோல் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், லக்கிம்பூர் செல்வதைத் தடுத்து வீட்டு காவலில் வைக்கப்பட்டார். இதனைக் கண்டித்து சமாஜ்வாதி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது அகிலேஷ் யாதவ் வீட்டு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது.

பாஜகவை அகற்றுவோம்- அகிலேஷ்
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளதாவது; உ.பி.யில் ஆளும் பாஜக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் சமாஜ்வாதி கட்சியினர் விஜய் யாத்திரை நடத்த உள்ளோம். குற்றவாளிகளை நீதியின் முன்பாக ஆளும் பா.ஜ.க. அரசு முன்னிறுத்தும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. இந்த பாஜகவை அதிகாரத்தில் இருந்து விவசாயிகள் தூக்கி எறிய வேண்டிய தருணம் இது. மத்திய அமைச்சர் அஜிஸ் மிஸ்ராவின் மகன், வன்முறை நடைபெற்ற இடத்தில்தான் இருந்தார் என்பதற்கான ஆதாரங்களாக வீடியோக்கள் இருக்கின்றன. மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அஜிஸ் மிஸ்ரா நீடிக்கும் வரை எப்படி போலீசாரால் அவரது வீட்டுக்குள் நுழையும் முடியும்? ஆகையால் அஜிஸ் மிஸ்ரா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

ஏர்போர்ட்டில் பூபேஷ் பாகல் போராட்டம்
இந்நிலையில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், உத்தரப்பிரதேசம் பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் உ.பி. அரசோ, லக்கிம்பூர் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என நேற்றே திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று லக்னோ விமான நிலையத்துக்கு பூபேஷ் பாகல் வருகை தந்தார். இருப்பினும் அவரை உ.பி..க்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் லக்னோ விமான நிலையத்திலேயே தரையிலேயே அமர்ந்து பூபேஷ் பாகல் போராட்டம் நடத்தினார். அப்போது பேசிய பூபேஷ் பாகல், கைது செய்யப்பட்ட பிரியங்காவை சந்திக்க அனுமதி மறுக்கிறது உ.பி. பாஜக அரசு என குற்றம் சாட்டினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications