தடையில்லா மின்சாரத்தால் ஒளிரும் உத்தரப் பிரதேசம்! கனவு நிஜமாகிவிட்டதாக யோகி ஆதித்யநாத் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தடையில்லா மின்சாரத்தால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனர் என்றும், இதே நிலை நீடிக்க மின்சாரம் மற்றும் எரிசக்தி துறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

யோகி ஆதித்யநாத் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த அறிவுறுத்தலை அவர் வழங்கியுள்ளார். மேலும், ""கடந்த ஆறு ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் உத்தரப்பிரதேசத்தின் ஒவ்வொரு கிராமமும், நகரமும், மாவட்டமும் மின்சாரத்தால் பிரகாசிக்கப்பட்டுள்ளன. தடையில்லா மின்சாரம் உள்ளது. மாநிலம் முழுவதும் 24x7 தடையில்லா மின்சாரம் வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம். மின் துறையில் தன்னிறைவு அடைய, எரிசக்தி துறையில் விரிவான சீர்திருத்தங்கள் தேவை.

Chief Minister Yogi Adityanath announced drastic changes to ensure uninterrupted power supply in Uttar Pradesh

ஒரு நுகர்வோர் கூட தவறான பில் பெறாமல், சரியான நேரத்தில் பில் பெறுவதை மின்சாரத்துறை உறுதி செய்ய வேண்டும். "இன்று, மின்சாரத் துறை/மின் கழகத்தின் முன் உள்ள மிகப்பெரிய சவால், சரியான நேரத்தில் பில்களை வழங்குவதும், அனைத்து நுகர்வோரிடமிருந்து பில் தொகையை வசூலிப்பதும்தான். ஒவ்வொரு விஷயத்திலும், ஒரு நுகர்வோர் கூட தவறான மின் கட்டணம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அனைவருக்கும் உரிய நேரத்தில் பில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதிக பில் அல்லது தாமதமான பில்களால் நுகர்வோருக்கு இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி, பில் டெபாசிட் செய்யும் ஆசையை நுகர்வோர் இழக்க நேரிடும்.எனவே சரியான பில் சரியான நேரத்தில் கொடுக்கப்படுவதை உறுதி செய்யவும்.இதற்காக அனைவரும் டிஸ்காம்கள் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்" என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+