கொரோனாவுக்கு பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகள்.. மாதந்தோறும் ரூ.4000 நிதியுதவி.. உ.பி. அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்.
லக்னோ: கொரோனாவுக்கு பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.4000 நிதயுதவி வழங்கப்படும் என உத்தரபிரதேச அரசு வெளியிட்ட அறிவிப்பு அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
உத்தரபிரதேசத்தில் அண்மைக்காலமாக ஏழை எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் நலனுக்காகவும், அவர்களின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல்படுத்தி வருகிறார். மேலும், உத்தரபிரதேச அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களும், மாநிலத்தின் கடைக்கோடி நபரையும் சென்றடைய வேண்டும் என முதல்வர் யோகி சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். அதேபோல, ஏழைகளின் மருத்துவ சிகிச்சை செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த சூழலில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் பிள்ளைகளை பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தி வந்தார். அப்போது, அந்த பிள்ளைகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்குவது என அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு பெற்றோரை பறிகொடுத்து வாடும் பிள்ளைகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படுகிறது. அதன்படி, தாய் தந்தையர் இருவரையும் பறிகொடுத்த பிள்ளைகளுக்கு மாதந்தோறும் ரூ.4000 நிதியுதவி வழங்கப்படும். தாய் அல்லது தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் 4000 வீரர்களுக்கு இலவசமாக அவரவர் சார்ந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். நாளை (மார்ச் 6) இந்த நிதியதவி மற்றும் விளையாட்டு உபகரணங்களை கோரக்பூரில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்க இருக்கிறார். மேலும், கோரக்பூரில் உள்ள ஜங்கில் கவுரியா மற்றும் சார்கவான் பகுதிகளில் உள்ள சுகாதார மையங்களில் தீவிர சிகிச்சை பிரிவுகளையும் (ஐசியு) முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்கவுள்ளதாக உபி அரசு தெரிவித்துள்ளது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications