உ.பி வளர்ச்சியில் சிறு குறு தொழில் நிறுவனங்களின் பங்கு கணிசமான அளவில் இருக்கும்! யோகி பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேச வளர்ச்சியில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பங்கு கணிசமான அளவில் இருக்கும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் பாஜக பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் ஏற்கெனவே இருந்த டபுள் என்ஜின் அரசு தற்போது ட்ரிபிள் என்ஜின் அரசாக மாறியிருக்கிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் சிறு குறு தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "கடந்த ஆட்சி காலத்தில் உத்தரப் பிரதேசத்தின் பெருமைகள் புறக்கணிக்கப்பட்டன. ஆனால் பாஜக ஆட்சியில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. நாங்கள் ஒவ்வொரு மாவட்டத்தின் தனிச்சிறப்பையும் கவனித்து அந்த தனிச்சிறப்புகளை மேலும் மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டோம்.
உதாரணமாக ஹாபூரின் அப்பளம் மிகவும் பேமஸானது. இந்த அப்பளத்தை சர்வதேச சந்தைக்கு நாங்கள் கொண்டு சென்றோம். அப்பள உற்பத்தியாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுத்தோம். எனவே இந்த அப்பளம் இந்தியா முழுமைக்கும் பேமஸானது. தற்போது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்த அப்பளத்தை தேடி தேடி வாங்குகின்றனர். எனவே அதிக அளவில் அப்பளம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
இது ஹாபூரில் மக்களுக்கு மறுவாழ்வை அளித்திருக்கிறது. ஆக பாஜக அரசு மக்கள் நலனில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. பாஜக பொறுப்பேற்று கடந்த 7 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், வீடுகள், கழிப்பறைகள், ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் மற்றும் ஜன்தன் கணக்குகள் ஆகியவை கோடிக்கணக்கான மக்களுக்கு பயனளித்துள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.35 லட்சம் கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வளர்ச்சியில் சிறுகுறு வளர்ச்சி நிறுவனங்களின் பங்கு கணிசமான அளவில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications