அம்மாவை வந்து பாருடா! உன் நினைப்பிலேயே இருக்காங்க! ஆதித்யநாத்திடம் சகோதரி உருக்கம்!
லக்னோ: உத்தர பிரதேச முதல்வராக இரண்டாவது முறையாக நாளை யோகி ஆதித்யநாத் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், ‛‛பதவியேற்புக்கு முன்பு தயவு செய்து அம்மாவை வந்து பாருடா... வயது முதிர்வில் உனது நினைப்பிலேயே இருக்கிறார். அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிய பின் பதவியேற்று கொள்'' என யோகி ஆதித்யநாத்துக்கு அவரது சகோதரி சசி சிங் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பாஜக 255 இடங்களில் வெற்றி பெற்றது. தனித்து ஆட்சியை பிடித்த நிலையில் 2வது முறையாக யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பு ஏற்க உள்ளார்.
அதன்படி இன்று பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட பாஜக முன்னணி தலைவர்களும், பிற கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

18 வயதில் வெளியேறினார்
இந்நிலையில் தான் யோகி ஆதித்யநாத்தின் குடும்பம் உத்தரகாண்ட் மாநிலம் பவ்ரி கர்வால் அருகே பஞ்சூர் கிராமத்தில் வசிக்கிறது. அங்கு அவரது சகோதரி சசி சிங் சிறிய கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் யோகி ஆதித்யநாத் குறித்து அவர் கூறுகையில் ‛‛யோகி ஆதித்யநாத் வீட்டில் இருந்து தனது 18வது வயதில் உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூருக்கு சென்றார். தான் துறவியாக மாறுவதாக கூட வீட்டில் கூறாமல் யோகி ஆதித்யநாத் வெளியேறினார். அரசியலில் கால்பதித்து எம்பி, முதல்வராக மாறியுள்ளார்'' என பெருமையாக தெரிவித்தார்.

அம்மாவை வந்து பாருடா
மேலும், ‛‛தயவுசெய்து ஒருமுறை வீட்டுக்கு வந்து அம்மாவை பாருடா... அவரோடு கொஞ்சம் நேரம் பேசுடா... நமது அம்மாவுக்கு அதிக வயதாகி விட்டது. ஆனாலும் உன்னை பற்றியே நினைத்தபடி இருக்கிறார். பதவியேற்புக்கு முன்பு ஒருமுறை வந்து அம்மாவை பார்த்துவிட்டு செல்... அவரது ஆசீர்வாதத்துடன் நீ (யோகி ஆதித்யநாத்) முதல்வராக பதவியேற்று கொள்ள வேண்டும்'' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தந்தையிடம் கேள்வி
இதுதவிர சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தை அவரது சகோதரி சசிசிங் பகிரந்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛சிறுவயதில் யோகி ஆதித்யநாத், தந்தையிடம் தன் குடும்பத்தை மட்டும் பார்ப்பதாக குற்றம்சாட்டுவார். அதற்கு தந்தை நான் ரூ.85 மட்டும் தான் சம்பாதிக்கிறேன். என்னால் மற்றவர்களை பற்றி நினைக்க முடியாது என்பார். மேலும், "நீங்கள் என்ன செய்வீர்கள் என்று பார்க்கிறேன்'' என தந்தை கூறுவார். தற்போது யோகி ஆதித்யநாத் தான் யார் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்'' என நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

வாரிசு அரசியலில் விருப்பமில்லை
மேலும், இந்தியாவில் அதிக சட்டசபை தொகுதிகள் கொண்ட மாநிலத்தை யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்கிறார். நீங்கள் சிறு கடை வைத்துள்ளீர்களே. இதைவிட்டுவிட்டு அரசியலில் ஈடுபடலாமே என கேள்வி கேட்டதற்கு, ‛வாரிசு அரசியலை யோகி ஆதித்யநாத் உள்பட குடும்பத்தினர் யாரும் விரும்புவது இல்லை. இதனால் தான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறோம்''என்றார்.

இயற்பெயர் என்ன
யோகி ஆதித்யநாத் 1972, ஜூன் 5ல் பிறந்தார். இவரது தந்தை பெயர் ஆனந்த் சிங், தாய் பெயர் சாவித்ரி தேவி. இவரது தாய் சாவித்ரி தேவி இன்னும் சிறிய வீட்டிலேயே உத்தரகாண்ட் மாநிலம் பவ்ரி கர்வால் அருகே பஞ்சூர் கிராமத்தில் வசித்து வருகிறார். யோகி ஆதித்யநாத்தின் இயற்பெயர் அஜய் சிங் ஆகும். ஆனால் அவர் கோரக்பூர் மடத்தில் இணைந்த பிறகு பெயர் யோகி ஆதித்யநாத் என மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு











Click it and Unblock the Notifications