எங்கள் ஓட்டுக்களை பாஜகவினர் திருடிவிட்டனர்.. ஃபரீதாபாத்தில் தலித் பெண்கள் பரபரப்பு புகார்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் பெண்களின் வாக்குகளை பாஜகவினர் திருடிவிட்டதாக ஃபரிதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கடந்த 12-ஆம் தேதி 6-ஆம் கட்ட தேர்தலின் போது ஃபரிதாபாத் தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில் வாக்களிக்க ஆசாட்டி கிராமத்தைச் சேர்ந்த விவேசனா (23) என்ற பெண் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்றார்.
முதல் முறையாக வாக்களிக்கும் அவர் 88-ஆவது வாக்குச் சாவடி மையத்தில் ஒரு மணிநேரமாக நின்று கொண்டிருந்தார். பின்னர் அவரது முறை வந்த போது வாக்களிக்க சென்றார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்தை பார்த்தார். அதில் வாக்களிக்க முயன்ற போது அந்த வாக்குச் சாவடியின் பாஜக ஏஜென்ட் கிரிராஜ் சிங் வேகமாக வந்து யானை சின்னத்துக்கு கீழே இருந்த பாஜகவின் தாமரை சின்னத்துக்கு வாக்களித்துவிட்டார்.

அழுத்தி
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், என்னுடைய வாக்கை நீங்கள் ஏன் அளித்தீர்கள் என கேட்டார். அதற்கு அவர் வாக்களித்துவிட்டேன். முடிந்துவிட்டது என கூறிவிட்டு அவரது இருக்கையில் அமர்ந்து விட்டார். பின்னர் யானை சின்னத்துக்கு நேராக உள்ள பொத்தானை அந்த பெண் அழுத்தி பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

மறு தேர்தல்
இது போன்ற ஏராளமான வாக்காளர்களின் ஓட்டுகளை போட்டதாக கிடைக்கப் பெற்ற வீடியோ ஆதாரத்தை கொண்டு கிரிராஜ் சிங் கைது செய்யப்பட்டார். இதையடுத்து வரும் மே 19-ஆம் தேதி அந்த வாக்குச் சாவடிக்கு மறு தேர்தல் நடைபெறுகிறது.

வீடியோ
எனினும் இந்த புகாரை சிங் மறுத்தார். இதையடுத்து வாக்குச் சாவடி அதிகாரியையும் இடைநீக்கம் செய்த தேர்தல் ஆணையம் மறுவாக்குப் பதிவுக்கு புதிய அதிகாரிகளை நியமித்துள்ளது. முதல் வீடியோவில் கிரிராஜ் சிங் விவேசனாவின் ஓட்டை போட்டது போல் மேலும் மூன்று பெண்களின் ஓட்டுகளையும் போட்டதை போலீஸார் கண்டனர்.

புகார்
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தங்களது வாக்குகளை வேறு ஒருவர் போட்டதாக தெரிவித்தனர். விவேசனா மட்டுமல்ல, அந்த வாக்குச்சாவடியில் 1222 வாக்காளர்கள் இருந்தனர். இதில் இன்னொரு வீடியோவில் வாக்களிக்க வந்த பெண்ணிடம் பாஜகவுக்கு அளிக்குமாறு சிங் பிரசாரம் செய்த காட்சிகள் கிடைத்துள்ளன. இதுபோல் ஏராளமான பெண்கள் புகார் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications