ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியம் உயர்வு.. குட்நியூஸ் சொன்ன யோகி ஆதித்யநாத்.. எவ்வளவு தெரியுமா?
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஆதரவற்ற பெண்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இந்நிலையில் மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் கான்பூரில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். ரூ.501 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதோடு ரூ.688 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 1001 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
அதன்பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். இதுதொடர்பாக யோகி ஆதித்யநாத் கூறியதாவது: மாநிலத்தில் பெண்களுக்கு உரிய மதிப்பு மற்றும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும். இதனை செய்யாவிட்டால் மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்கள் என்பது முழுமையடையாத நிலையில் தான் இருக்கும்.
ஆதரவற்ற பெண்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்துவதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தோம். அதன்படி ஆதரவற்ற பெண்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,000ல் இருந்து உயர்த்தி வழங்கப்பட உள்ளது'' என்றார். லோக் கல்யாண் சங்கல்ப் பத்ரா எனும் திட்டத்தின் கீழ் இந்த ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
தற்போது இந்த திட்டத்தின் கீழ் ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.1000 ஓய்வூதியம் கிடைத்து வருகிறது. இது ரூ.1,500 ஆக அதிகரிக்கப்படும் என உத்தர பிரதேச தேர்தல் வாக்குறுதியில் பாஜக தெரிவித்து இருந்தது. இந்த திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பேபி ராணி மவுரியாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன.
இந்த விஷயத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய முடிவு எடுப்பார் என அமைச்சர் பேபி ராணி மவுரியா தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியம் விரைவில் உயர்த்தி வழங்கப்படும் என யோகி ஆதித்யாத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications