ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியம் உயர்வு.. குட்நியூஸ் சொன்ன யோகி ஆதித்யநாத்.. எவ்வளவு தெரியுமா?
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஆதரவற்ற பெண்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இந்நிலையில் மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் கான்பூரில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். ரூ.501 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதோடு ரூ.688 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 1001 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
அதன்பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். இதுதொடர்பாக யோகி ஆதித்யநாத் கூறியதாவது: மாநிலத்தில் பெண்களுக்கு உரிய மதிப்பு மற்றும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும். இதனை செய்யாவிட்டால் மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்கள் என்பது முழுமையடையாத நிலையில் தான் இருக்கும்.
ஆதரவற்ற பெண்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்துவதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தோம். அதன்படி ஆதரவற்ற பெண்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,000ல் இருந்து உயர்த்தி வழங்கப்பட உள்ளது'' என்றார். லோக் கல்யாண் சங்கல்ப் பத்ரா எனும் திட்டத்தின் கீழ் இந்த ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
தற்போது இந்த திட்டத்தின் கீழ் ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.1000 ஓய்வூதியம் கிடைத்து வருகிறது. இது ரூ.1,500 ஆக அதிகரிக்கப்படும் என உத்தர பிரதேச தேர்தல் வாக்குறுதியில் பாஜக தெரிவித்து இருந்தது. இந்த திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பேபி ராணி மவுரியாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன.
இந்த விஷயத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய முடிவு எடுப்பார் என அமைச்சர் பேபி ராணி மவுரியா தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியம் விரைவில் உயர்த்தி வழங்கப்படும் என யோகி ஆதித்யாத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications