எருதுகளாக மாறி ஏர் இழுத்த பெண்கள்.. உ.பி.யில் அப்படி என்னதான் நடக்கிறது?
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஏர்கலப்பையில் எருதுகளுக்கு பதிலாக பெண்கள் நிலத்தை உழுத காட்சிகள் வேகமாக பரவி வருகின்றன.
நாடு முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பல்வேறு கிராமங்களிலும் முக்கிய நகரங்களிலும் மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க அரசு சார்பிலும் சமூக ஆர்வலர்கள் சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

காரிப் பயிர்கள்
மழை வேண்டி பல்வேறு கோயில்களில் யாகங்களும் நடத்தப்படுகின்றன. இன்த நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புந்தேல்கண்ட் பகுதியில் விவசாயிகள் பருவமழைக்காக காத்துகிடக்கின்றனர். வயல்களில் காரிப் பயிர்களான நெல் விதைகளை விதைக்க தயாராக உள்ளனர்.

பூஜை
ஆனால் அங்கு கடும் வறட்சி நிலவுகிறது. இதையடுத்து கான்பூர் மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் கிராமத்தில் வினோதமான முறையில் பெண்கள் பூஜைகளை செய்து மழையை வரவழைக்கின்றனர்.

நம்பிக்கை
எருதுகள் பூட்டப்படும் ஏர் கலப்பையை பெண்கள் தங்கள் தோள்களில் சுமந்து நிலத்தை உழுதனர். இதுகுறித்து பெண்கள் கூறுகையில் ,நாங்கள் மழை வேண்டி நிலத்தை உழுகிறோம். ஜெனக மன்னர் காலத்தில் இருந்தே பெண்கள் கலகலப்பையை பிடித்து வயல்களில் ஏர் உழுதால் நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.

பயிர்கள்
வருணனை வேண்டி பெண்கள் ஏர் உழுவதும் 100 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் பழக்கம். இதன் மூலம் மழை பெய்தால் எந்தவித கஷ்டமமும் இல்லாமல் பயிர்களை விளைவிக்க முடியும் என பெண்கள் நம்புகின்றனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications