"மறைந்துபோன மனிதாபிமானம்" உயிருக்கு போராடியபடி உதவி கேட்டும் செல்போனில் வீடியோ எடுத்த அவலம்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் அடிபட்டு ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடக்கும் சிறுமி உதவி கேட்டும் அவரை மீட்காமல் அங்கு கூடியிருந்தவர்கள் மனிதாபிமானம் இன்றி செல்போன்களில் வீடியோ எடுத்த சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் கன்னுஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 13-வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.
மாயமான சிறுமியை குடும்பத்தினர் தேடி அலைந்தனர். இந்த நிலையில், அருகில் உள்ள திறந்த வெளி இடத்தில் பலத்த காயங்களுடன் அந்த சிறுமி ரத்த காயங்களுடன் அடிபட்டு கிடந்தது தெரியவந்தது.

ரத்த காயங்களுடன் உதவி
தலை உள்பட பல இடங்களில் ரத்தக் காயங்களுடன் அடிப்பட்டு உயிருக்கு போராடி வந்த சிறுமி உதவி அளிக்குமாறு குரல் கொடுக்கிறார். சிறுமி ஒருவர் அடிபட்டு கிடப்பதை கவனித்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு திரண்டனர். ஆனால் யாருமே சிறுமியை காப்பாற்ற முன்வரவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.. வலியால் துடிக்கும் அந்த சிறுமியை ஒருவர் கூட காப்பாற்ற முன்வராமல் இருந்தனர்.

செல்போனில் படம் பிடித்தனர்
மனிதாபிமானம் மரித்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு ஒருவர் கூட சிறுமியை காப்பாற்றிவிட முன் வராமல் தங்கள் செல்போனில் சிறுமி அடிபட்டு உதவி கேட்கும் காட்சிகளை படம் பிடிப்பதிலேயே குறியாய் இருந்துள்ளனர். பல்வேறு கோணங்களில் சிறுமி உதவி கேட்டு அலறுவதை சிலர் தங்கள் செல்போனில் படம் பிடித்தது வேதனையிலும் வேதனை.

இணையத்தில் பரவும் வீடியோ
கொஞ்சம் கூட சலனம் இன்றி உதவ எந்த அக்கறையும் காட்டாமல் வீடியோ எடுக்கும் காட்சிகளில் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், போலீஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டதா என கூட்டத்தில் நிற்கும் ஒருவர் கேட்கிறார். அப்போது ஒருவர் போலீஸ் அதிகாரியின் போன் நம்பரை கேட்கிறார். அதன்பிறகே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு இருக்கும் எனத்தெரிகிறது.

தனி ஆளாக மீட்ட போலீஸ்காரர்
போலீசார் வந்து மீட்கும் வரை சிறுமி அதே இடத்தில் காயங்களுடன் வலியால் துடித்தபடி உயிருக்கு போராடியுள்ளார். தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை வெறும் கைகளால் தூக்கியபடி ஆட்டோ ரிக்ஷாவில் கொண்டு வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது போலீஸ்காரர் ஒருவர் சிறுமியை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏற்றி வைக்கும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.

ஆஸ்பத்திரியில் அனுமதி
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும் போது, ''காயம் அடைந்த நிலையில் சிறுமி மீட்கப்பட்டு உள்ளார். சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் சிறுமியை அனுமதிக்கப்பட்டு இருக்கிறோம். சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டாரா? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவும் இல்லை.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications