சிறுவனாக இருந்தபோது பிளேட், கப்களை கழுவியிருக்கிறேன்.. தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி உருக்கம்!
லக்னோ: சிறு வயதில் பிளேட்களையும், கோப்பைகளையும் கழுவி டீ விநியோகம் செய்து தான் வளர்ந்தேன் எனவும் மோடிக்கும் டீக்குமான உறவு மிக ஆழமானது என்றும் உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 6 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும் ஒரு கட்ட தேர்தல் மட்டுமே பாக்கியுள்ளது. வரும் ஜூன் 01 ஆம் தேதி 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கப்களை கழுவியிருக்கிறேன்: ஒரே ஒரு கட்ட தேர்தலே எஞ்சியிருப்பதால் அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். மத்தியில் ஆளும் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெல்ல வெண்டும் என்ற இலக்குடன் வியூகம் வகுத்து வருகிறது. பாஜகவை ஆட்சி அரியணையில் அமரவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சார்பூரில் இன்று தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, மோடி கூறியதாவது:- குழந்தையாக இருக்கும் போது கப்கள், தட்டுக்களை கழுவியிருக்கிறேன். டீ விநியோகித்துதான் நான் வளர்ந்தேன். மோடிக்கும் டீ-க்கும் இடையேயன உறவு ஆழமானது” என்று பேசினார்.
டீ விற்று தான் வளர்ந்தேன்: சிறு வயதில் தனது தந்தையுடன் ரயில்வே நிலையத்தில் டீ விற்றதாக கூறும் மோடி, இளம் வயதில் தான்பட்ட கஷ்டங்களை மேடையில் பகிர்ந்து உருக்கமாக பேசினார். தொடர்ந்து சமாஜ்வாடி கட்சியை கடுமையாக சாடிய பிரதமர் மோடி கூறியதாவது:- சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களித்து தங்கள் ஓட்டுக்களை வீணடிக்க யாருமே தயாராக இல்லை. மூழ்கிக் கொண்டு இருப்பவர்களுக்கு யாருமே வாக்களிக்க மாட்டார்கள்.
சமாஜ்வாடி மீது அட்டாக்: நிச்சயமாக ஆட்சியை பிடிக்க இருக்கும் கட்சிக்கு மட்டுமே பொதுமக்கள் வாக்களிப்பார்கள். இந்தியா கூட்டணி கட்சிகளை பற்றி நாட்டு மக்கள் நன்கு புரிந்து கொண்டார்கள். இந்தியா கூட்டணி கட்சிகள் மத, சாதியவாதம் பிடித்த கட்சிகள். குடும்ப கட்சிகள். இந்த கட்சிகள் ஆட்சி அமைக்கும் போதெல்லாம் இதை சார்ந்தே முடிவுகளை எடுக்கின்றன. யாதவ் சமூகத்தில் திறம்பட செயல்பட கூடிய பல தலைவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அகிலேஷ் யாதவ் சீட் வழங்குகிறார். சமாஜ்வாடி கட்சி ஆட்சியின் போது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு இருந்தது. மக்களின் உயிரோ உடமைகளை எப்போது பறிபோகும் என்றே தெரியாது. மாஃபியா கேங்கை கூட தங்களின் வாக்கு வங்கியாகவே சமாஜ்வாடி அரசு பார்த்தது.
இட ஒதுக்கீட்டை பறிக்க முயற்சி: இந்தியா கூட்டணி கட்சிகள் எஸ்.சி, எஸ்.டி, ஒபிசி மக்களின் இட ஒதுக்கீட்டை பறிக்க முயற்சிக்கிறது. மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க கூடாது என்று நமது அரசியல் அமைப்பு தெளிவாக கூறுகிறது. ஆனால், சமாஜ்வாடி கட்சி 2012-ல் தனது தேர்தல் வாக்குறுதியில் முஸ்லீம்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று கூறியது” இவ்வாறு அவர் பேசினார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications