Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறுவனாக இருந்தபோது பிளேட், கப்களை கழுவியிருக்கிறேன்.. தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி உருக்கம்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: சிறு வயதில் பிளேட்களையும், கோப்பைகளையும் கழுவி டீ விநியோகம் செய்து தான் வளர்ந்தேன் எனவும் மோடிக்கும் டீக்குமான உறவு மிக ஆழமானது என்றும் உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 6 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும் ஒரு கட்ட தேர்தல் மட்டுமே பாக்கியுள்ளது. வரும் ஜூன் 01 ஆம் தேதி 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Grew up washing cup plates and serving tea say PM Narendra Modi At BJP Rally


கப்களை கழுவியிருக்கிறேன்: ஒரே ஒரு கட்ட தேர்தலே எஞ்சியிருப்பதால் அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். மத்தியில் ஆளும் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெல்ல வெண்டும் என்ற இலக்குடன் வியூகம் வகுத்து வருகிறது. பாஜகவை ஆட்சி அரியணையில் அமரவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சார்பூரில் இன்று தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, மோடி கூறியதாவது:- குழந்தையாக இருக்கும் போது கப்கள், தட்டுக்களை கழுவியிருக்கிறேன். டீ விநியோகித்துதான் நான் வளர்ந்தேன். மோடிக்கும் டீ-க்கும் இடையேயன உறவு ஆழமானது” என்று பேசினார்.

டீ விற்று தான் வளர்ந்தேன்: சிறு வயதில் தனது தந்தையுடன் ரயில்வே நிலையத்தில் டீ விற்றதாக கூறும் மோடி, இளம் வயதில் தான்பட்ட கஷ்டங்களை மேடையில் பகிர்ந்து உருக்கமாக பேசினார். தொடர்ந்து சமாஜ்வாடி கட்சியை கடுமையாக சாடிய பிரதமர் மோடி கூறியதாவது:- சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களித்து தங்கள் ஓட்டுக்களை வீணடிக்க யாருமே தயாராக இல்லை. மூழ்கிக் கொண்டு இருப்பவர்களுக்கு யாருமே வாக்களிக்க மாட்டார்கள்.

சமாஜ்வாடி மீது அட்டாக்: நிச்சயமாக ஆட்சியை பிடிக்க இருக்கும் கட்சிக்கு மட்டுமே பொதுமக்கள் வாக்களிப்பார்கள். இந்தியா கூட்டணி கட்சிகளை பற்றி நாட்டு மக்கள் நன்கு புரிந்து கொண்டார்கள். இந்தியா கூட்டணி கட்சிகள் மத, சாதியவாதம் பிடித்த கட்சிகள். குடும்ப கட்சிகள். இந்த கட்சிகள் ஆட்சி அமைக்கும் போதெல்லாம் இதை சார்ந்தே முடிவுகளை எடுக்கின்றன. யாதவ் சமூகத்தில் திறம்பட செயல்பட கூடிய பல தலைவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அகிலேஷ் யாதவ் சீட் வழங்குகிறார். சமாஜ்வாடி கட்சி ஆட்சியின் போது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு இருந்தது. மக்களின் உயிரோ உடமைகளை எப்போது பறிபோகும் என்றே தெரியாது. மாஃபியா கேங்கை கூட தங்களின் வாக்கு வங்கியாகவே சமாஜ்வாடி அரசு பார்த்தது.

இட ஒதுக்கீட்டை பறிக்க முயற்சி: இந்தியா கூட்டணி கட்சிகள் எஸ்.சி, எஸ்.டி, ஒபிசி மக்களின் இட ஒதுக்கீட்டை பறிக்க முயற்சிக்கிறது. மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க கூடாது என்று நமது அரசியல் அமைப்பு தெளிவாக கூறுகிறது. ஆனால், சமாஜ்வாடி கட்சி 2012-ல் தனது தேர்தல் வாக்குறுதியில் முஸ்லீம்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று கூறியது” இவ்வாறு அவர் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+