ஸ்வீட்டால் வந்த பிரச்சினை.. மணமேடையிலேயே மாறி மாறி 'பளார்' விட்ட மணமக்கள்.. களேபரமான கல்யாண வீடு
லக்னோ: இனிப்பு ஊட்டிக்கொள்ளும் போது மணமேடையிலேயே மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. மணமேடை என்றும் பாராமல் அத்தனை உறவினர்கள் மத்தியிலும் இருவரும் மாறி மாறி சரமாரியாக அடித்துக்கொள்ளும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான நிகழ்ச்சி... வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வுகளில் திருமண நாளும் கண்டிப்பாக இடம் பிடித்து இருக்கும்.

உற்றார் உறவினர்கள் புடை சூழ மணமக்கள் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் இந்த நிகழ்வில் மிகவும் தடல் புடலாக கொண்டாடுவார்கள். அவரவர் வசதிக்கேற்ப திருமண வீட்டில் விருந்து உபசரிப்புகளும் இருக்கும்.
போட்டோ ஷூட்கள், திருமண சடங்குகள் என அன்றைய நாள் முழுவதுமே திருமண வீடு களை கட்டியிருக்கும். சில இடங்களில் திருமண வீட்டில் சில வினோத சம்பவங்களும் அரங்கேறி விடுகின்றன. அதுவும் மணமகன் போதையில் திருமணத்திற்கு வருவது.. மணமகள் வீட்டில் தகராறு செய்வது என சில நேரங்களில் முகம் சுளிக்க வைக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

அது தொடர்பான செய்திகளும் வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகும். அந்த வகையில் தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், மணமேடையில், மணமகனும் மணமகளும் நின்று கொண்டு இருக்கின்றனர். உறவினர்கள் மணமேடைக்கு கீழேயும் மணமேடையிலும் கலகலப்பாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
திருமண சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் போது, மணமகன் மணப்பெண்ணுக்கு இனிப்பு ஊட்டி விடுகிறார். ஆனால், ஸ்வீட் ஊட்டிவிட வேண்டாம் என்று மணப்பெண் மறுக்கிறார். ஆனாலும் வலுக்கட்டாயமாக மாப்பிள்ளை ஊட்டி விட்டதால் கோபம் அடைந்த பெண்ணோ மணமகனை கன்னத்தில் பளார் என ஒன்று விட்டார். பதிலுக்கு மாப்பிள்ளையும் திருப்பி அடிக்கவே அவர்களுக்குள் சண்டை முற்றியது.
மணமேடை என்றும் பாராமல் அத்தனை உறவினர்கள் மத்தியிலும் இருவருமே சரமாரியாக அடித்துக்கொண்டனர். கொஞ்சம் கூட சளைக்காமல் மாறி மாறி அடித்துக்கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரையும் பிடித்து சமாதானப்படுத்தினர். ஆனாலும் விடாமல் இந்த சண்டை நீடித்தது.

இந்த சண்டையை பார்த்து திருமண வீட்டினருக்கு வந்த உறவினர்கள்... மணம் முடிந்த நாளிலேயே இப்படி அடித்துக்கொள்கிறார்களே... என புலம்பாத குறைதான்... குழந்தைகள் போல மணமக்கள் இருவரும் சண்டை போட்டுக்கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. எனினும், இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது என்ற விவரம் இல்லை. நெட்டிசன்கள் பலரும் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்களா... இல்லை விவாகரத்து செய்கிறார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதேபோல், நோ மீன்ஸ் நோ.. எனவே மணப்பெண்ணை கட்டாயப்படுத்துவது தவறுதான் என்றும் கூறியிருக்கிறார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில் இருவருமே விட்டுக்கொடுத்து சென்றால்தான் வாழ்க்கை இனிக்குமே தவிர.. இப்படி சண்டை போடுவதால் பிரிவுதான் ஏற்படும் என அட்வைஸும் செய்து இருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
-
பல்லாவரத்தில் சேர்ந்து வாழ மறுத்த மனைவி... ஓட ஓட விரட்டி ஆசிட் வீசி.. குருடாக்கிய கணவன் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications