உ.பி.தேர்தல்: முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் எந்த கட்சிக்கு ஆதரவு? மக்கள் கருத்து
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்குள்ள முஸ்லீம் மக்கள் அதிகம் உள்ள கட்டேஹரி தொகுதி மக்கள் கருத்துகளை பார்ப்போம்.
Recommended Video
உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு வரும் பிப்ரவரி 10 -ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வரும் மார்ச் 10 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உ.பி.யில் ஆட்சியை தக்க வைக்க பாஜக கடுமையாக போராடி வருகிறது.
அது போல் அங்குள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரச்சினைகளை கூறி யோகி அரசுக்கு எதிராக வாக்கு சேகரிக்கும் விவகாரத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் இறங்கியுள்ளன.
தேர்தல் கருத்து கணிப்புகளும் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் கட்டேஹரி தொகுதியில் பொதுமக்களிடம் ஒன் இந்தியா சார்பில் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. அதில் ஒருவர் உ.பி.யில் மாயாவதி ஆட்சி ஏற்பட வேண்டும். அவர் ஆட்சியில்தான் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும் என்கிறார்.
3 டோஸ் வேணாம், இனி சிங்கில் டோஸ் போதும்.. ஒரு டோஸ் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி
மற்றொருவரோ அகிலேஷ் யாதவ் ஆட்சிக்கு வர வேண்டும். அவர் ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கியுள்ளார். மேலும் அவர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும் என்கிறார். மாநிலத்தில் ராமர் பெயரை வைத்து அரசுகள் அமைந்துள்ளன. விலைவாசி உயர்வு மட்டும் பாஜகவுக்கு உதவும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.