மூஸ்வாலா மாடல்.. அதிக், அஸ்ரபை கொல்ல தூண்டிய பிஸ்னோயின் மதவெறி வீடியோ! உபி கொலையாளிகளின் பின்னணி
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி முன்னாள் எம்பி அதிக் அகமது மற்றும் அஷ்ரப் ஆகியோர் போலீசாரால் அழைத்து செல்லப்பட்டபோது அவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொலையாளிகள் மூவரும் சிறையில் இருக்கும் பிரபல தாதா லாரன்ஸ் பிஸ்னாயின் பேச்சுக்களால் கவரப்பட்டது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பிரபல ரவுடியும் சமாஜ்வாடி கட்சி முன்னாள் எம்.பியுமான அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அதிகின் மகனை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ள அதிக் அனுமதிக்கப்படாத நிலையில், அவரையும் அவரது சகோதரரையும் போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக பிரயாக்ராஜில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அவரிடம் பேட்டியெடுக்க ஏராளமான செய்தியாளர்கள் அங்கு குழுமி இருந்தனர். போலீசார் அழைத்து வரப்படும்போது செய்தியாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு அதிக் பதிலளித்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் துப்பாக்கியால் சுட்டத்தில் குண்டு பாய்ந்து அதிக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரபும் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பத்திரிகையாளர்களைபோல் கூட்டத்திற்குள் புகுந்தது தெரியவந்தது. இந்த கொலையில் ஈடுபட்டதாக லவ்லேஷ் திவாரி, சன்னி சிங், அருண் மௌரியா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின்போது பல்வேறு தகவல்களை போலீசாரிடம் கொலையாளிகள் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் இந்த கொலை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது சன்னி சிங் என்பது தெரியவந்துள்ளது. பிரபல தாதாவான லாரண்ஸ் பிஸ்னாயின் மதவெறுப்பை பரப்பும் வீடியோக்களை பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டவர் சன்னி சிங் என்றும் அவர்கள் விசாரணையில் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி மிகப்பெரிய கொலையை செய்ய வேண்டும் என்று சதித்திட்டம் தீட்ட தொடங்கி உள்ளார் சன்னி சிங். அதாவது பஞ்சாபில் மிகவும் பிரபலமான இசைக் கலைஞர் சித்து மூஸ்வாலா கடந்த ஆண்டு மே 29 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதை நாட்டையே உலுக்கியதைபோல் ஒரு கொலையை செய்ய வேண்டும் என்று கனவு கண்டு இருக்கிறார் சன்னி சிங். இதற்காக அவர் லவ்லேஷ் திவாரி மற்றும் அருண் மௌரியா ஆகியோரை அழைத்து உள்ளார்.

மூவரும் சேர்ந்து அதிக் அகமதுவை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டி உள்ளனர். போலீசார் சோதனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக பத்திரிகையாளர்களைபோன்று வேடம் அணிந்து சனிக்கிழமை இரவு 10 மணியளவில் பிரியாக்ராஜ் மருத்துவமனைக்கு மற்ற பத்திரிகையாளர்களுடன் சென்ற மூவரும் தங்கள் திட்டத்தை செய்து போலீசாரிடம் பிடிப்பட்டு உள்ளனர்.
கொலைக்கு மூளையாக செயல்பட்ட சன்னி சிங் மற்றும் லவ்லேஷ் திவாரி, அருண் மௌரியா ஆகிய 3 பேருமே 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்று கூறப்படுகிறது. கொலை சம்பவத்துக்கு பின் காவல்துறை அவர்களை கைது செய்து அழைத்து செல்லும்போது ஜெய்ஸ்ரீராம் என்று மூவரும் சத்தமாக முழக்கமிட்டு உள்ளனர். 14 நாட்கள் நீதிமன்ற காவலில் பிரதாப்கர் சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டு உள்ளார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications