இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்... "என்னால் கணிக்க முடியாது".. ராஜ்நாத் சிங் பேட்டி
லக்னோ: லக்னோ மக்களவை தொகுதியில் வாக்களித்துவிட்டு வந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தன்னால் எதையும் கணிக்க முடியாது, மக்கள் யார் வேண்டும் என விரும்புகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்திருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் 5ம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லக்னோ தொகுதியில் மீண்டும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூணம் சின்ஹா சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிடுகிறார்.

இன்று லக்னோ மக்களவை தொகுதிக்கும் ,இன்று தேர்தல் நடந்து வரும் நிலையில் காலை 7.30 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வந்து ராஜ்நாத் தனது வாக்கினை அளித்தார்.
பின்னர் வாக்களித்த கையை செய்தியாளர்களுக்கு கேமராவில் படுமாறு புன்னகைத்தபடி தூக்கி காண்பித்தார். அப்போது தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த ராஜ்நாத் சிங், "என்னால் எதையும் கணிக்க முடியாது. லக்னோ வாக்காளர்களிடமே இதற்கான முடிவினை விட்டுவிடுகிறேன். யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் மக்களுக்கு முழு உரிமையும் உள்ளது. மக்கள் யாரை தேர்ந்தெடுக்க விரும்புகிறார்களோ அவர்களே நாட்டை ஆள்வார்கள். ஒருவேளை மக்கள் பிரதமர் மோடியை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என விரும்பி இருந்தால் அவர் மீண்டும் பிரதமராக வருவார்" இவ்வாறு கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications