வரதட்சணைப் பிரச்சினை.. மனைவியின் நாக்கை வெட்டி வீட்டுக் காவலில் வைத்த கணவர்!
வரதட்சணைப் பிரச்சினையால் மனைவியின் நாக்கை கணவரே வெட்டிய சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லக்னோ: வரதட்சணை கேட்டபோது எதிர்த்துப் பேசியதற்காக, மனைவியின் நாக்கை கணவரே வெட்டிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கெதிரான பிரச்சினைகளில் வரதட்சணைக் கொடுமையும் முக்கியமான ஒன்று. இதற்கெதிராக பல்வேறு சட்டதிட்டங்கள் உள்ள போதும், படிப்பறிவில்லாதவர்கள் மட்டுமல்ல நன்கு படித்த பலருமே இது போன்ற வரதட்சணைக் கொடுமை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், உத்தரப் பிரதேசத்தில் வரதட்சணைப் பிரச்சினை காரணமாக மனைவியின் நாக்கை கணவரே வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் திருமணமான நாள் முதல் தன் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் பொறுமை இழந்த அவரது மனைவி, கடந்த 6ம் தேதி ஆகாஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், தன்னை எதிர்த்துப் பேசிய மனைவியின் நாக்கை வெட்டியுள்ளார். இந்த சம்பவம் வெளியில் தெரிந்து விடாமல் இருக்க, அவரை வீட்டில் வைத்துப் பூட்டியுள்ளார். ஒருவழியாக ஆகாஷிடம் இருந்து தப்பி வந்த அவரது மனைவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தன் வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் பெற்றோர் உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் ஆகாஷ் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதப் படுத்தியுள்ளனர். காரணம் ஆகாஷின் தந்தையும் ஒரு போலீஸ் அதிகாரி தான். இதனால் இந்த விவகாரத்தை அப்பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்திருப்பதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications