மகளை வெட்டி.. உடலை துண்டாக்கி.. சூட்கேஸில் அடைத்து வைத்து வீசி எறிந்த தந்தை.. ஷாக் சம்பவம்
மகளை கொன்று துண்டு துண்டாக வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டார்
லக்னோ: மகளை வெட்டி கூறுபோட்டு.. சூட்கேஸ்களில் அடைத்து வைத்து.. மும்பை பகுதிகளில் அந்த உடல்பாகங்களை வீசி எறிந்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜானுபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அர்விந்த் திவாரி. மனைவி, 4 மகள்களுடன் வசித்து வந்தார்.
ஆனால் 6 மாசத்துக்கு முன்பு, குடும்ப சூழல் காரணமாக, திவாரி, அவரது மூத்த மகள் பிரின்சியை அழைத்து கொண்டு மும்பை வந்துவிட்டார்.

காதல்
ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் திவாரி வேலைக்கு சேர்ந்துள்ளார்.. அதேபோல, பிரின்சியும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இந்த ஆபீசில் பிரின்சி ஒருவரை காதலித்துள்ளார்.. ஆனால் காதலன் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என தெரிகிறது.. இந்த காதல் விவகாரம் திவாரிக்கு தெரியவந்ததும், மகளுக்கு தடை சொல்லி உள்ளார்... ஆனால் மகளோ காதலில் மிக தீவிரமாக இருக்கவும், திவாரியால் அதை தாங்கி கொள்ளவே முடியவில்லை.

திவாரி
இன்னொரு சமுதாயத்தை சேர்ந்த நபர் என்பதாலேயே அந்த காதலனை திவாரிக்கு பிடிக்கவே இல்லை... இதனால் மகளை கொலை செய்யலாம் என்று திவாரி முடிவெடுத்தார்.. அதன்படியே பெற்ற மகள் என்றும் பாராமல், அவரை கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி உள்ளார்.. பிறகு சூட்கேஸில் அந்த உடல் பாகங்களை 3 சூட்கேஸ்களில் அடைத்து வைத்து கொண்டு, பிறகு ஒரு ஆட்டோ பிடித்து டிட்வாலா ரயில்வே ஸ்டேஷன் சென்றார்.

சூட்கேஸ்
அங்கிருந்து ரயில் ஏறி கல்யாண் நகர் வந்தார்.. திரும்பவும் அங்கிருந்து ஆட்டோக்களில் ஏறி.. அந்த உடல் பாகங்களை பல இடங்களிலும் வீசியிருக்கிறார். அப்படி ஒரு ஆட்டோவில் சூட்கேசுடன் ஏறும்போதுதான், "என்ன இவ்வளவு நாத்தம் அடிக்கிறதே.. சூட்கேசில் என்ன இருக்கு" என்று ஆட்டோ டிரைவர் கேட்டுள்ளார். இதற்கு எதையோ சொல்லி திவாரி சமாளித்துவிட்டு, அந்த சூட்கேஸை அதே ஆட்டோவிலேயே வைத்துவிட்டு போய்விட்டார்.

போலீஸ் விசாரணை
பிறகு ஆட்டோ டிரைவர்தான் சூட்கேஸ் குறித்து போலீசுக்கு தகவல் சொல்லி உள்ளார். விரைந்து வந்த போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்தபோதுதான், உடல் பாகங்கள் கிடந்ததை கண்டு அதிர்ந்தனர். அதன்பிறகு அந்த ஆட்டோ டிரைவர் உதவியுடன் கல்யாண் ரயில்வே ஸ்டேஷனில் இருந்த சிசிடிவியை பார்த்து திவாரியை கைது செய்தனர். ஆனால் பிரின்சியின் பாதி உடலை காணவில்லையாம்.

உடல் பாகங்கள்
முதலில் விஷயத்தை மறுத்த திவாரி, இறுதியில் மகளை கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார். மகளை எப்படி கொன்றார், உடல் பாகங்களை எங்கெங்கே வீசினார் என்று திவாரியிடம் விசாரணை தொடர்கிறது. பெற்ற மகளை கூறுகூறாக வெட்டி, சூட்கேஸில் அதனை அடைத்து, மும்பை பகுதி முழுவதும் உடல்பாகங்களை வீசியெறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications