உபா சட்டத்தில் கைதான.. பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனுக்கு ஜாமீன் மறுப்பு.. நீதிபதி கூறிய காரணம்
லக்னோ: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சித்திக் கப்பன் தாக்கல் செய்திருந்த ஜாமீன் வழக்கை மதுரா நீதிமன்றம் மறுத்துள்ளது.
கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கியது.
அப்போது உயிரிழந்த அந்த பெண்ணின் குடும்பத்தினரைக் கேரளாவைச் சேர்ந்த சில பத்திரிக்கையாளர்கள் சந்திக்கச் சென்றனர். அப்போது வழியிலேயே சித்திக் கப்பன் உள்ளிட்ட சில பத்திரிக்கையாளர்களை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்தனர்,

பத்திரிக்கையாளர் கைது
கடந்த அக்டோபர் 5ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர் மீது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அக்டோபர் 7ஆம் தேதி, அவர் மீது உபா சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில். அவர் ஜாமீன் கோரி மதுரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது

ஜாமீன் மனு.
வழக்கை விசாரித்த நீதிபதி அனில் குமார் பாண்டே ஜாமீன் மனுவை ரத்து செய்தார். நீதிபதி தனது உத்தரவில், "குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பத்திரிகையாளர் எனக் கூறினார். அவர் கைது செய்யப்பட்ட போது, தேஜஸ் செய்தி நிறுவனத்தில் பணிபுரிவதாக ஐடி கார்ட் வைத்திருந்தார். ஆனால் தேஜஸ் செய்தி நிறுவனம் கடந்த டிசம்பர் 2018 இல் மூடப்பட்டுவிட்டது. அவரிடம் இருந்து சில தடை செய்யப்பட்ட புத்தகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஜாமீன் மறுப்பு
மேலும், அவர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்ததும் தெரியவந்துள்ளது. அவரது லேப்டாப்பில் வன்முறையைத் தூண்டும் வகையில் சில கட்டுரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட சிமி அமைப்பின் தலைவர்களுடன் அவர் தொடர்பில் இருந்துள்ளார். சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக அவருக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் முதல் பணம் அனுப்பப்பட்டுள்ளன. அவர் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையாக உள்ளதால், ஜாமீன் வழக்கு காரணங்கள் எதுவும் இல்லை" என்று கூறினார்,

அதிருப்தி
தேசத் துரோகம் மற்றும் பயங்கரவாத நிதியுதவி அளித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக சுமார் எட்டு மாதங்களாகப் பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் சிறையில் உள்ளார். இது குறித்து சித்தின் கப்பன் வழக்கறிஞர் மதுவன் தத் சதுர்வேதி கூறுகையில், "முறையான விசாரணை இல்லாமல் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. அவர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உறுப்பினர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அதேநேரம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்ட அமைப்பும் இல்லை" .
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications