Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வட இந்தியர்களை இழிவுபடுத்தும் தென்னிந்தியா, திமுக, காங்கிரஸ்-.உ.பி. பிரசாரத்தில் மோடி பகீர்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: வட இந்தியர்களை, உத்தரப் பிரதேச மாநில மக்களை “இந்தியா” கூட்டணியில் உள்ள திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இழிவாக பேசுவதாக உ.பி. தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

லோக்சபா தேர்தல் இதுவரை 4 கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களின் 131 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவடைந்துவிட்டது. எஞ்சிய 3 கட்ட தேர்தல்களும் வட இந்திய மாநிலங்களில்தான் நடைபெற உள்ளது.

PM Modi alleges INDIA leaders abuse people of Uttar Pradesh in South India

இந்த நிலையில் உ.பி. தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தென்னிந்தியாவில் உத்தரப்பிரதேச மாநில மக்களை இழிவாக பேசுகின்றனர். தென்னிந்தியாவில் ஓட்டுக்காக உ.பி. மக்களை இழிவுபடுத்துகின்றனர்.

ராகுல் காந்தி மிகவும் ஆபத்தானவர்.. இந்தியா கூட்டணியின் தலைவர்கள் தென்னிந்தியாவில் மோசமான வார்த்தைகளால் உ.பி. மக்களை விமர்சித்து பேசுகின்றனர். இந்தியா கூட்டணியின் தலைவர்கள் சனாதன தர்மத்தை இழிவுபடுத்துகின்றனர்.

இந்தியா கூட்டணி கட்சிகளான தமிழ்நாட்டில் திமுக, கேரளாவில் இடதுசாரிகள், கர்நாடகா, தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிகள் உ.பி. மக்களுக்கு எதிராக இழிவாக விமர்சிக்கின்றனர். உங்களை இழிவாக பேசும் "இந்தியா" கூட்டணி தலைவர்களுக்காக நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்? இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஜாதியைப் பாதுகாக்கும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். ஆனால் சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசிவிட்டதாக பாஜகவினர் பொய் பிரசாரம் செய்தனர். அத்துடன் பிரதமர் மோடி முதல் அனைத்து அமைச்சர்களும் இதனையே 'இந்தியா” கூட்டணிக்கு எதிரான ஆயுதமாகவும் கையில் எடுத்தனர்.

அதேபோல தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் படுகொலை செய்யப்படுவதாக திடீரென யூடியூபர் மணீஷ் காஷ்யப் உள்ளிட்டோர் வதந்தி பரப்பினர். இதனால் தென்னிந்தியா- வட இந்தியா என பிரச்சனை வெடித்தது. பீகார் உள்ளிட்ட மாநிலத்தில் இருந்து அரசு அதிகாரிகள் குழு தமிழ்நாட்டுக்கு வருகை தந்து வட மாநிலத்தவர் நிலைமை குறித்து ஆராய்ந்துவிட்டு சென்றது. இப்படி வதந்தி பரப்பிய மணீஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியே வந்த மணீஷ் காஷ்யப் சில நாட்களுக்கு முன்னர்தான் பாஜகவில் இணைந்தார்.

தற்போது பிரதமர் மோடியும் வட இந்தியா - தென் இந்தியா என பிரிவினைவாதம் பேசி இருக்கிறார். ஏற்கனவே முஸ்லிம்கள் குறித்து கடுமையாக விமர்சித்து வரும் பிரதமர் மோடி தற்போது, தென்னிந்திய மாநிலங்களில் வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டதால் தென்னிந்தியர்கள் குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார் என்பது காங்கிரஸின் குற்றச்சாட்டு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+