மனமுருகிய பிரதமர்.. அயோத்தியில் தரையில் படுத்து பாலராமரை வணங்கிய மோடி!
லக்னோ: நாளை மறுநாள் மூன்றாம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அயோத்தி பாலராமர் கோயிலில் பிரதமர் மோடி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ராமரை வழிப்பட்டிருக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் உள்ள 88 லோக்சபா தொகுதிகளுக்கு ஏப்.26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது.

இந்நிலையில் இன்றுடன் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரைகள் முடிந்திருக்கின்றன. மே 7ம் தேதியன்று அதாவது நாளை மறுநாள் 12 மாநிலங்களில் 94 லோக்சபா தொகுதிகளுக்கு 3ம் கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என பாஜகவுக்கு சாதகமான மாநிலங்களில் இந்த முறை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் பாஜக முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்திருக்கிறது. எனவே இந்த வெற்றியை வசப்படுத்திட இன்று அயோத்தி பால ராமர் கோயிலில் பிரதமர் வழிபாடு செய்திருக்கிறார். உ.பியில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு மாலை கோயிலுக்கு சென்ற மோடி, பாலராமரின் முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வழிபட்டிருக்கிறார்.
இந்த தேர்தல் பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் முக்கியானதாகும். இந்த முறை அவர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், மோடிக்கு பின்னர் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் தலைவர் என்கிற பெருமையை பெறுவார். அதேபோல 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா வருகிறது.

எனவே இதை சிறப்பாக கொண்டாட பாஜக ஆட்சியில் இருக்க வேண்டியது அவசியமாகும். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்கிற பின்னணியில்தான் மோடி ராமர் கோயிலில் வழிபட்டிருக்கிறார்.
ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் பாரம்பரிய நாகரா பாணியில் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கோயிலின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி பாலராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications