டெல்லியில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான்.. சீனா விஷ வாயுவை அனுப்பி இருக்கலாம்.. பாஜக தலைவர்
Recommended Video
லக்னோ: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவரான வினீத் அகர்வால் சர்தா கூறுகையில், இந்தியாவில் காற்றை மாசுபடுத்த பாக், சீனா விஷ வாயுவை காற்றில் அனுப்பி இருக்கக்கூடும் என்றார்.
டெல்லியில் காற்று மாசுபாடு மிக அபாயக்கட்டத்தில் இருந்தது. இதற்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் காய்ந்த வயல்களை தீவைத்து எரிப்பதே காரணம் என்று புகார்கள் எழுந்தது. அத்துடன் தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் வாயுக்களும் காரணம் என்று சொல்லப்படுகிறது.
டெல்லியில் காற்று மாசை தடுக்க வயல்வெளிகளில் யாரேனும் தீ வைத்து எரிக்கிறார்களா என்பதை கண்காணிக்க போலீஸை அனுப்பி மத்திய அரசு கண்காணித்து வருகிறது. இதேபோல் தொழிற்சாலைகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை இயக்கவும் கட்டுப்பாடுகள் டெல்லியில் விதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள்
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவரான வினீத் அகர்வால் சர்தா காற்று மாசுபடுதற்கு விவசாயிகள் காரணம் என்ற குற்றம்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

விஷ வாயு
இது தொடர்பாக அவர் மீரட்டில் கூறுகையில், நமது அண்டைநாடுகளாக பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகள் இந்தியாவில் காற்று மாசை ஏற்படுத்துவதற்காக காற்றில் விஷவாயுவை அனுப்பி இருக்ககூடும் என்று சந்தேகம் தெரிவித்தார்.

கண்காணிக்கணும்
பாகிஸ்தானில் இருந்து விஷ வாயு வருகிறதா என்பதை நாம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வினீத் அகர்வால் வலியுறுத்தினார். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பதவி ஏற்றதில் இருந்து பாகிஸ்தான் விரக்தியுடன் உள்ளது. எந்த ஒரு போரிலும் வெல்ல முடியாத நிலையில் இருக்கும் பாகிஸ்தான் ஏதேனும் தந்திரங்களை உபயோகிக்கக்கூடும் என்றார்.

குற்றச்சாட்டு
"டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட மக்கள் மாசுபாட்டுக்கு விவசாயிகள் வயல்களை எரிப்பதும் தொழிற்சாலைகள் கழிவுகளை வெளியேற்றுவதும் காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் விவசாயி என்பவர் நம் நாட்டின் முதுகெலும்பாவார். எனவே விவசாயிகளையோ மற்றும் தொழில்துறைகள் மீதோ குறை கூறக்கூடாது" என்றும் வினீத் அகர்வால் கூறினார்.

அமித் ஷா அர்ஜூனா
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனர் ஆக இருந்து நாட்டிற்கு வரும் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பார்கள் என்றும் பாஜக தலைவர் வினீத் அகர்வால் கூறினார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications