எனக்கு ‘அம்மா’ மாதிரி.. இது தான் கடவுள் போட்ட உத்தரவு..! கங்கை கரையில் கண் கலங்கிய பிரதமர் மோடி..!
லக்னோ: உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாக கங்கை நதியில் சிறப்பு பூஜைகள் செய்தார். அப்போது தாயைப் பற்றி பேசியவர் கண்கள் கலங்கி விம்மி அழுதபடியே பேசினார்.
நாடு முழுவதும் லோக் சபா தேர்தலானது ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. உலகின் மிகப்பெரிய தேர்தல் திருவிழாவில் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

இதுவரை நான்கு கட்ட தேர்தல்கள் நடந்திருக்கும் நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி வாக்குப்பதிவும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
பிரதமர் மோடி: இந்த நிலையில் குஜராத்தை சொந்த மாநிலமாகக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தற்போது உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். வாரணாசி தொகுதியில் ஏழாவது மற்றும் இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடக்க இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் தொகுதி என்பதால் தேசிய அளவில் வாரணாசி தொகுதி முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல்: அவருடன் உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத், உத்தர பிரதேச மாநில பாஜக தலைவர் சவுத்ரி பூபேந்திர சிங், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட NDA தலைவர்கள் வேட்பு மனு தாக்கலுக்கு உடன் சென்றிருந்தனர். வாரணாசி தொகுதியில் 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்ற நிலையில் இந்த முறையும் அவரது வெற்றி நிச்சயம் என பாஜகவினர் கூறி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து களமிறங்கும் நிலையில் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.
கங்கை நதி: இந்த நிலையில் வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக கங்கை நதியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார். வேத மந்திரங்கள் முழங்க பூக்களை தூவி பிரதமர் மோடி வழிபட்டார். அப்போது கங்கை நதி குறித்து பிரதமர் மோடி உருக்கமாகப் பேசினார். கங்கை நதி என்னை தத்தெடுத்துக் கொண்டது. எனது தாய் மறைவுக்கு பின் கங்கை குறித்து நெருக்கமாக உணர்கிறேன். கங்கை நதி தான் என்னை வலுப்படுத்தியது.
கண்கலங்கிய மோடி: கங்கை நதி தாயைப் போல அனைவரையும் காக்கிறது. 140 கோடி மக்களுக்காக நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன் இது கடவுளின் உத்தரவு என பேசினார். அப்போது தாய் என குறிப்பிட்டபோது பிரதமர் நரேந்திர மோடி கண் கலங்கினார். சிறிது நேரம் தலையைக் குனிந்தவாறு அமைதியாக இருந்த அவர் ஒருவாராக தேற்றிக்கொண்டு மீண்டும் அவர் பேசிய போது அவரது குரல் தழுதழுத்தது. தொடர்ந்து விம்மியபடியே பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ராகுல் விமர்சனம்: தற்போது இந்த வீடியோவை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி அழுவார் என ராகுல் காந்தி பேசியதை வைத்து காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தும் வருகின்றனர். கடந்த சில நாட்களாக பிரதமர் நரேந்திர மோடி தனது உரையின் போது மிகவும் பதட்டமாக இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே கண்ணீர் விட வாய்ப்பிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் கூறியிருந்த நிலையில், அதனை வைத்து விமர்சனம் எழுந்துள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications