Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனக்கு ‘அம்மா’ மாதிரி.. இது தான் கடவுள் போட்ட உத்தரவு..! கங்கை கரையில் கண் கலங்கிய பிரதமர் மோடி..!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாக கங்கை நதியில் சிறப்பு பூஜைகள் செய்தார். அப்போது தாயைப் பற்றி பேசியவர் கண்கள் கலங்கி விம்மி அழுதபடியே பேசினார்.

நாடு முழுவதும் லோக் சபா தேர்தலானது ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. உலகின் மிகப்பெரிய தேர்தல் திருவிழாவில் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

Prime Minister Modi shed tears before filing nomination for Lok Sabha Elections 2024

இதுவரை நான்கு கட்ட தேர்தல்கள் நடந்திருக்கும் நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி வாக்குப்பதிவும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

பிரதமர் மோடி:
இந்த நிலையில் குஜராத்தை சொந்த மாநிலமாகக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தற்போது உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். வாரணாசி தொகுதியில் ஏழாவது மற்றும் இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடக்க இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் தொகுதி என்பதால் தேசிய அளவில் வாரணாசி தொகுதி முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல்: அவருடன் உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத், உத்தர பிரதேச மாநில பாஜக தலைவர் சவுத்ரி பூபேந்திர சிங், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட NDA தலைவர்கள் வேட்பு மனு தாக்கலுக்கு உடன் சென்றிருந்தனர். வாரணாசி தொகுதியில் 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்ற நிலையில் இந்த முறையும் அவரது வெற்றி நிச்சயம் என பாஜகவினர் கூறி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து களமிறங்கும் நிலையில் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.

கங்கை நதி: இந்த நிலையில் வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக கங்கை நதியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார். வேத மந்திரங்கள் முழங்க பூக்களை தூவி பிரதமர் மோடி வழிபட்டார். அப்போது கங்கை நதி குறித்து பிரதமர் மோடி உருக்கமாகப் பேசினார். கங்கை நதி என்னை தத்தெடுத்துக் கொண்டது. எனது தாய் மறைவுக்கு பின் கங்கை குறித்து நெருக்கமாக உணர்கிறேன். கங்கை நதி தான் என்னை வலுப்படுத்தியது.

கண்கலங்கிய மோடி: கங்கை நதி தாயைப் போல அனைவரையும் காக்கிறது. 140 கோடி மக்களுக்காக நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன் இது கடவுளின் உத்தரவு என பேசினார். அப்போது தாய் என குறிப்பிட்டபோது பிரதமர் நரேந்திர மோடி கண் கலங்கினார். சிறிது நேரம் தலையைக் குனிந்தவாறு அமைதியாக இருந்த அவர் ஒருவாராக தேற்றிக்கொண்டு மீண்டும் அவர் பேசிய போது அவரது குரல் தழுதழுத்தது. தொடர்ந்து விம்மியபடியே பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

ராகுல் விமர்சனம்: தற்போது இந்த வீடியோவை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி அழுவார் என ராகுல் காந்தி பேசியதை வைத்து காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தும் வருகின்றனர். கடந்த சில நாட்களாக பிரதமர் நரேந்திர மோடி தனது உரையின் போது மிகவும் பதட்டமாக இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே கண்ணீர் விட வாய்ப்பிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் கூறியிருந்த நிலையில், அதனை வைத்து விமர்சனம் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+